தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வார முடிவில் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை. ஆனால் இரண்டாவது வாரத்தில் இரண்டு பேர் வெளியேறினர்.
அந்த இருவரில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட போட்டியாளரான ஜிபி முத்துவும் ஒருவர். இவர் தனது மகனை பார்க்காமல் இருக்க முடியவில்லை எனக்கூறி வெளியேறினார். இதையடுத்து மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் குறைவான வாக்குகளைப் பெற்ற சாந்தி, இரண்டாவது வார இறுதியில் எலிமினேட் செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து மீதமாக 19 போட்டியாளர்கள் வீட்டுக்குள் உள்ள நிலையில் இவர்களுக்கு நீயும் பொம்மை நானும் பொம்மை என்னும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டியாளர்கள் தமக்குள்ளே மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றியுள்ள முக்கிய போட்டியாளர் தான் ஷெரினா.
இந்த நிலையில் இவர் குறித்த விடயங்களை ஆராய்வோம். அதாவது ஷெரினா 1998ம் ஆண்டு கேரளாவில் பிறந்துள்ளார். படிப்பில் ஆர்வம் கொண்ட இவர் சூப்பராக படித்து வந்ததோடு தற்பொழுது தனியார் கம்பனி ஒன்றையும் நடத்தி வருகின்றாராம்.அதே போல தனியாக ஸ்ரூடியோ ஒன்றையும் நடத்தி வருவதோடு மாடலிங் துறையிலும் அதிக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
இவருக்கு அண்ணா மற்றும் தங்கையும் இருக்கின்றார்களாம். பிஸ்னஸ் மனேஜ்மன்ட் படித்த இவர் ப்ரீ டைம்ல யோகா, ஜிம் போன்ற தன்னை அழகாக வைத்துக் கொள்ளும் விடயங்களிலும் ஈடுபட்டு வருவாராம். 2009ம் ஆண்டு மாடல் அழகியாக வலம் வந்த இவர் தெலுங்கு ,தமிழ் ஆகிய மொழிப் படங்களிலும் நடித்து வருகின்றாராம்.
மேலும் சிறந்த கெல்பிங் சென்ஸ் உள்ள இவர் நிறைய பேருக்கு பண உதவியும் செய்திருக்கின்றாராம்.அதே போல பிராணிகள் மீதும் அக்கறை உடையவராம். குறிப்பாக வீதிகளில் சும்மா திரியும் நாய்களுக்கு கழுத்தில் பெலிட் மாட்டி விட்டிருவாராம்.இதனால் அது யாரோ ஒருவருடைய நாய் என்று ஏனையவர்கள் துன்புறுத்தமாட்டார்களாம்.அத்தோடு இதற்காக இவர் பேஸ்புக்கில் ஒரு பேஜையும் வைத்து நடத்தி வருகின்றாராம்.
மேலும் சாப்பிட்டு பிரியராக வலம் வரும் இவர் தனது வாழ்வில் அதிகளவான துன்பங்களை சந்திக்கவில்லை என்பதோடு எந்த விதமான ரிலேசன்சிப்லையும் இவர் இல்லை என்பதும் முக்கியமாகும். மேலும் தனது கெரியரை வளர்ப்பதற்காக போராடுவரோக இருக்கின்றாராம்.தன்னுடன் வேலை செய்யும் நபர்களுக்கு சிறந்த சன்மானங்களை வழங்கி சிறந்த தோழியாகவும் இருந்து வருகின்றாராம். மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர் எத்தனை நாள் இருப்பார் அடுத்து என்ன செய்யப் போகின்றார் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!