• May 04 2024

நடிக்க வாங்க என்று கூப்பிட்டது ஒரு குற்றமா?- சந்தானத்தின் முன்னாடி அலப்பறையைப் போட்ட பவர் ஸ்டார்- நடந்தது என்ன தெரியுமா?

stella / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் லொள்ளு சபா படத்தில் தொடங்கிய சந்தானத்தின் கேரியர், இப்போது சிங்கிள் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு தொடர்கிறது. ஆரம்பத்தில் காமெடி கேரக்டரில் மட்டுமே நடித்து வந்த சந்தானம், திடீரென ஹீரோ ரூட்டுக்கு மாறினார். அதன்படி, தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, குலுகுலு, ஏஜென்ட் கண்ணாயிரம் உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். 

ஆனாலும், இவைகளில் ஒருசில படங்கள் மட்டுமே சந்தானத்துக்கு ஹீரோவாக அடையாளம் கொடுத்தது. பல படங்கள் முதலுக்கே மோசம் என்ற நிலையில் தோல்வியை தழுவியது. இந்நிலையில், கடந்த வாரம் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் சந்தானத்துக்கு தரமான கம்பேக் கொடுத்துள்ளது


 பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், முனிஷ்காந்த் என பெரிய காமெடி பட்டாளமே நடித்திருந்தது. அதிகம் எதிர்பார்ப்பு இல்லாமல் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ், திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. இந்த நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்ட போது சந்தானம் பேசிய விஷயம் தற்பொழது வைரலாகி வருகின்றது.

அதாவது கண்ணா லட்டுத்தின்ன ஆசையா என்னும் திரைப்படத்தில் சேது கேரக்டருக்கும் நானும் படத்தில நடிக்க ஓகே சொல்லியாச்சு ஆனால் மற்ற கேரக்டர் யாரை நடிக்க வைக்கலாம் என்று நிறைய பேரை செலக்ட் பண்ணினோம் ஆனால் அந்த டைம்ல யாருமே செட் ஆவல, அந்த நேரம் தான் பவர் ஸ்டார் போட்டோ ஒரு போஸ்டரில் பார்த்தோம்.


அவர் கிட்ட போய் இப்பிடி சொன்னோம் எங்க படத்தில நடிக்க  வாங்க என்று, அவர் போஸ்டர் பார்த்திட்டு எல்லாம் என்னை நடிக்கக் கூப்பிடக் கூடாது என்னுடைய படத்தைப் பார்த்திட்டு கூப்பிடனும் என்று சொல்லி அவர் நடித்த லத்திகா என்னும் திரைப்படத்தை போட்டுக்காட்டினாரு. அந்தப் படத்தை பார்த்திட்டு தான் ஓகே சேர் நீங்க நடிக்க வாங்க என்று சொன்னோம். அதுக்குபிறகு தான் அவரும் ஓகே சொல்லி கண்ணா லட்சுத் திண்ண ஆசையா படத்தில் நடிச்சார் என்று ஓபனாக சொல்லியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement