• May 03 2024

நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் அவசரஅவசரமாக திருமணம் செய்து கொள்ள அட்லி தான் காரணமா?- உண்மையை உடைத்த பிரபலம்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகள் காதலித்து வந்து அண்மையில் திருமணம் செய்து கொண்டவர்கள் தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா.கடந்த ஆண்டு திருமணம் செய்த கொண்ட இவர்கள் அண்மையில் வாடகைத் தாய் மூலம் இரட்டைக குழந்தைகளையுமு் பெற்றுக் கொண்டனர்.

தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் விக்னேஷ் சிவன் தன்னுடைய குடும்பப் புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் கூட நயன்தாரா குழந்தைகளை கொஞ்சும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.


இந்த நிலையில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

 நயன்தாரா, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்வு செய்து நடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இயக்குநர் அட்லி, பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து தான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்குமாறு வந்து கேட்டுள்ளார். ஏற்கனவே ஸ்ரீதேவி, ஹேமாமாலினி என பல ஹீரோயின்கள் தமிழில் இருந்து பாலிவுட்டிற்கு சென்று, உச்சம் தொட்டுள்ளனர்.


அதே போல பாலிவுட் சென்று முயற்சித்து பார்க்கலாம் என நயன்தாரா முடிவெடுத்துவிட்டார். அதுவும் முதல் படமே ஷாருக்கான் உடன் என்றால் கசக்குமா என்ன? இதனால் விக்னேஷ் சிவனுக்கு பயம் வந்துவிட்டது. பாலிவுட் சென்று அடுத்தடுத்து படங்களில் அவர் பிசியாகி விட்டால், திருமணம் செய்ய பல ஆண்டுகள் ஆகிவிடுமே என்று யோசித்த விக்னேஷ் சிவன், என்னை திருமணம் செய்துகொண்டு, எங்கு வேண்டுமானாலும் செல் என்று  டீல் பேசியுள்ளார்.


இதனையடுத்து கடந்த ஆண்டு அவர்கள் திருமணம் செய்துகொண்டனர். நயன்தாராவின் முதல் பாலிவுட் படமான ஜவான் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் வெற்றியை பொருத்து, நயன்தாராவுக்கு அடுத்தடுத்து பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தால், அவர் இந்தி படங்களில் நடிக்க சென்றுவிடுவார் என அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement