தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வருபவர் தான் கஞ்சா கறுப்பு. மதுரையைச் சேர்ந்த இவர்
இயக்குநர் பாலா இயக்கத்தில் வெளியான பிதாமகன் படத்தில் கஞ்சா விற்பவராக நடித்திருந்தார். இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடித்திருந்தனர்.
இப்படத்தைத் தொடர்ந்தே அவர் கஞ்சா கறுப்பு என்று அழைக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து இவர் ராம், சிவகாசி, சண்டக்கோழி, திருப்பதி, தாமிரபரணி, பருத்திவீரன், அழகிய தமிழ்மகன் திருப்பதி, பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியிருக்கின்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஏ ஆர் கேந்திரன் இயக்கி நடித்திருக்கும் படம் ஓங்காரம்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் இடம் பெற்றது.இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கே ராஜன், நடிகர் கஞ்சா கருப்பு, மோகன் ஜி, படக்குழுவினர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய கஞ்சா கருப்பு, இந்த விழாவிற்கு ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவேன் என்று இந்த படத்தின் நடிகை கூறினாராமே!
அந்த நடிகை ஒரு லட்சம் கொடுத்தால் தான் வருவாளா? எதுக்கு இப்படி பண்றாங்க என்று தெரியல என்று மேடையில் படு கேவலமாக கஞ்சா கறுப்பு அந்த நடிகையை பேசியிருந்தார். இவரை தொடர்ந்து தயாரிப்பாளர் கே ராஜன் கூறியிருந்தது, படத்தின் நடிகை வர்ஷா இந்த விழாவிற்கு வருவதற்கு ஒரு லட்சம் கேட்டிருக்கிறார்.
இதை கொடுக்க மறுத்ததனால் அவர் விழாவிற்கு வரவில்லை. அவரோட அவருடைய அம்மா தான் இந்த விஷயத்தில் முரண்டு பிடிக்கிறாராம். அவரைப் பார்த்தால் அவர் கால் முட்டியை உடைத்து விடுவேன் என்றெல்லாம் பேசியிருக்கிறார். இப்படி இவர்கள் பேசிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருவதைக் காணலாம்.
Listen News!