இயக்குநர் விக்னேஷ் சிவனும் நடிகை நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்தைத் தொடர்ந்து பல இடங்களுக்குச் சென்று வந்த இவர்கள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்.
சமீபத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது பிறந்தநாளை கொண்டாட குடும்பத்துடன் துபாய் சென்றிருந்தார். அங்கு தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என அறிவித்து குழந்தைகளின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இந்த பதிவை விரும்பியுள்ளனர். மேலும் பலர் அந்த பதிவில் நயன்தாரா & விக்னேஷ் சிவனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.நடிகை காஜல் அகர்வால், பெற்றோர் கிஃளப்புக்கு உங்களை வரவேற்கிறேன் என கூறியுள்ளார். இயக்குநர் அட்லி தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். நடிகர் கவினும் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!