• May 03 2024

யாரையும் பற்றி தெரியல என்றால் வாயை மூடிட்டு இருக்கனும்- சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாகப் பேசிய பிரபல சீரியல் நடிகர்

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான்.

சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர் இமான். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும் இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.


இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், “இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம். வரும் காலங்களில் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும்.

என் வாழ்க்கையில் நடந்த துன்பங்கள், வலிகளுக்கு சிவகார்த்திகேயன் ஒரு முக்கிய காரணம். அவருடன் மிகவும் நெருக்கமாக பழகியதால், அவர் செய்த துரோகத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை." எனத் தெரிவித்திருந்தார். இது குறித்த பேச்சு தான் அனைத்து சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.


இந்நிலையில் விஜய் டிவியின் தமிழும் சரஸ்வதியும் சீரியல் ஹீரோ தீபக் தற்போது சிவகார்த்திகேயன் பற்றி பேட்டி அளித்திருக்கிறார்.சர்ச்சை பற்றி பேசிய அவர் 'ஒருவர் பற்றி தெரியவில்லை என்றால் பேசவே கூடாது.. வாயை மூடிட்டு இருக்கனும்' என கூறி இருக்கிறார்.இவருக்கு சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருக்கும் போதே பழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement