• May 10 2024

ரெண்டு பொண்ணுங்க சேர்ந்தா எதிர்த்த வீடு தீ புடிக்க போகுதுன்னு அர்த்தம் ! - KPY Sasikala கொடுத்த பேட்டி

stella / 8 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களில் ரசிகர்களால் விரும்பிப் பார்க்கப்பட்ட ஷோ தான் கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமான பிரபலங்கள் பலர் இருக்கின்றனர். அவர்கள் வரிசையில் நிஷா,அசார்,டிஎஸ்கே, தீனா,பாலா, குரேஷி,சரத் பழனி, என பலரைக் கூறிக் கொண்டே போகலாம்.

அவர்கள் வரிசையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் சசிகலா. பட்டிமன்றப் பேச்சாளரான இவர் தன்னுடைய சுவாரஸியமான பேச்சினால் ரசிகர்கள் பலரையும் கவர்ந்திருந்தார்.தொடர்ந்து பட்டிமன்னறங்களில் நடுவராக இருக்கும் இவர் அண்மையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.அதில் அவர் கூறியதாவது


எனக்கு சின்ன வயசிலையே கல்யாணம் பண்ணி வைச்சிட்டாங்க, கல்யாணத்துக்கு பிறகு தான் பிளஸ் டூ, காலேஜ் எல்லாம் படிச்சேன். நான் சொந்தஉழைப்பில் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுபவள். கல்யாணம் பண்ணி வீடு கட்டினதால் ரொம்ப கடன்ல இருந்தோம்.அதனால ஆபீஸ் போட்ய்டு வந்து ரியூசன் கிளான் கொடுப்பேன்.

இவ்வாறு ரியூசன் கிளாஸ் கொடுத்ததால் தான் பட்டிமன்றத்தில் பேச வாய்ப்புக் கிடைத்தது. இப்போது நான் பட்டி மன்றத்தில் நடுவராக இருக்கின்றேன்.சொந்தமா வீடு கடை எல்லாம் வைச்சிருக்கின்றேன். என்னுடைய மகள் ரெண்டு பேருக்கும் 50 பவுன்ல நகை கொடுத்து கல்யாணம் பண்ணி வைச்சேன்.மகன் டாக்டருக்கு படிக்கிறான்.இன்னும் ரெண்டு வருஷத்தில சம்பாதிக்க ஆரம்பிச்சிருவான்.நானும் வீட்டில ஜாலியாக இருப்பேன்.


எங்க ஊர்க்காறங்க கடைக்கே வந்து என்னைப் பற்றி தப்பா பேசுவாங்க, ஆனால் அவரு என் கிட்டை தவறாக இதுவரை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. தாலி செய்ன் கூட இல்லாமல் இருந்தேன். இப்போ தங்கத்தில எல்லா நகைகளும் வைச்சிருக்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன் என்று தெரரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement