• May 06 2024

அப்படி நடந்தா என்ன பண்ணுவீங்க பாக்கியா? பழனிக்கு வீடு தேடி வந்த சர்ப்ரைஸ்! தரமான சம்பவம்

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி, பாக்கியா, அமிர்தா, எழில் ஆகியோர் கிச்சனிலிருந்து பேசிக் கொண்டிருக்க, அங்கு செழியன் வருவதை பார்த்த பாக்கியா, என்ன கண்ணு எல்லாம் சிவந்து போய் இருக்கு. நைட் தூங்கலையா என கேட்க, இல்லமா நைட் முழுக்க பாப்பா கத்திக்கிட்டே இருந்தா. இப்பதான் தூங்க வச்சிட்டு வாரேன் என பொய் சொல்லுகிறார். அதற்கு ஈஸ்வரி குழந்தையை தூக்கிட்டு வா நான் பாத்துக்குறேன் என சொல்ல, இல்லை இப்போ தான் தூங்க வச்சிட்டு வந்தேன் என சமாளிக்கிறார்.

இதை அடுத்து எழிலுடன் மேலே exercise செய்வதற்கு சென்று விட்டு எழிலிடம், ஜெனி இப்போ நிறைய சந்தேகப்படுறா என்று நைட் நடந்த விஷயத்தை பற்றி சொல்லுகிறார். அதற்கு எழில், இப்பதான் நீங்க சேர்ந்து இருக்கீங்க உங்களுக்கு இடையில் நிறைய விரிசல் இருக்கு போகப் போக சரியாகும். இப்போ போய் கொஞ்சம் தூங்கு என அட்வைஸ் பண்ணி அனுப்புகிறார்.

மறுபக்கம் பழனிச்சாமியும் அம்மாவும் சாமி கும்பிட்டு விட்டு இருக்க, வீட்டில் காலிங் பெல் சத்தம் கேட்கிறது. வந்து பார்த்தால் யாரும் இல்லை. ஆனால் அவரது வீட்டுக்கு அவரது அக்காவும் தங்கச்சியும் வந்து சப்ரைஸ் கொடுக்கிறார்கள். அவர்களை கூட்டிக்கொண்டு போய் அமர வைத்து பேசிக்கொண்டு இருக்கும் போது, அடுத்த காலிங் பெல் சத்தம் கேட்க, யார் என பார்த்தால் பாக்கியாவின் குடும்பம் வந்திருக்கிறது.


அவர்களையும் உள்ளே அழைத்து தனது அக்கா தங்கைக்கு அறிமுகம் பண்ணி வச்சு, எல்லாரும் ஒன்றாக இருந்து கதைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

இதன் போது பழனிச்சாமியின் அம்மா உள்ளே செல்ல, அவரது அக்காவும் தங்கையும் சென்று பழனிக்கு பொண்ணு பார்த்தேன் என்று சொன்னீர்களே யார் அவங்க எனக் கேட்க, அது பாக்கியா தான் என ஷாக் கொடுக்கிறார். 

அதற்கு அவரது தங்கச்சி அவங்களுக்கு கல்யாணம் ஆகி பையனுக்கு பிள்ளையும் இருக்குது. அவங்களை எப்படி அண்ணாக்கு கல்யாணம் கட்டி வைப்பிங்க என்று அவருக்கு விருப்பம் இல்லாத மாதிரி பேச, அந்த இடத்திற்கு வந்த பாக்கியா  அவர்களுக்கு ஸ்வீட் கொடுக்கிறார். ஆனால் பழனிச்சாமியின்  அம்மாவுக்கும்  அக்காவுக்கும் சுகர் இருக்கு என சொல்லி கொடுக்க மறுக்கிறார்.

இதை தொடர்ந்து பார்த்தியா அவளுக்கு எங்க வீட்ட பத்தி எல்லாமே தெரியும். அவ தான் சரியான ஆள் என சொல்ல, பழனிச்சாமியின் அக்கா எனக்கு சம்மதம் என சொல்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

இதேவேளை, தற்போது பழனிச்சாமிக்கு பாக்கியாவை கல்யாணம் செய்து வைக்க அவரது அம்மா, அக்கா சம்மதம் சொன்ன நிலையில், இது பாக்கியா காதுக்கு போனால் என்ன நடக்கும் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement