• May 04 2024

சூர்யாவை சந்தித்தால் இது பற்றி கட்டாயம் கேட்பேன்- ஓபனாகப் பேசிய தமன்னா

stella / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் தமன்னா. இவர் இதனைத் தொடர்ந்து கல்லுாரி என்னும் படத்தில் நடித்ததன் மூலமே ரசிகர்களின் பேவரிட் நடிகையானார். இதனால் விஜய், சூர்யா, கார்த்தி, விஷால் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்திருக்கின்றார்.அந்த வகையில் தமிழில் இவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீசாகவுள்ளது. இப்படத்தில் இவர் ஆடிய காவாலயா என்னும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

காவாலா பாடல் மற்றும் அதில் தமன்னாவின் ஆட்டம் ரசிகர்களை மட்டுமில்லாமல் பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்து அதிகமான ரீல்ஸ்கள் இந்தப் பாடலுக்காக போடப்பட்டுள்ளன. இதனிடையே, ஜெயிலர் படத்தின் பிரமோஷனையொட்டி தமன்னா பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். 


அதில் நடிகர் சூர்யா குறித்த கேள்விக்கு பதிலளித்த தமன்னா, சூர்யாவை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அவர் தற்போது நடித்துவரும் கங்குவா படத்தின் ப்ரமோ சிறப்பாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டார். 

இந்தப் படத்தில் நடித்துள்ள திஷா பட்டானியை தான் சமீபத்தில் சந்தித்து, படம் குறித்து பேசியதாகவும் தெரிவித்துள்ள தமன்னா, சூர்யாவிடம் தான் படம் குறித்தும் படத்தின் அப்டேட் குறித்தும் கேட்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தமன்னாவுக்கு பல படவாய்ப்புக்கள் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement