• May 05 2024

நான் செத்தால் குஷ்பூ தான் காரணம்... கோபத்தில் பகீர் கிளப்பிய பாரதிராஜா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருகின்ற பாரதிராஜா இயக்கத்தில் ஏராளமான வெற்றி படங்கள் மற்றும் காதல் காவியங்கள் பலவும் உருவாகி இருக்கின்றன.

இதனையடுத்து பல விருதுகளையும் வென்ற இவரின் சேவையை கவுரவிக்கும் வகையில் மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தது. தற்போது பாரதிராஜா படங்களை இயக்குவது மட்டுமல்லாமல் நடித்தும் வருகின்றார்.


அந்த வகையில் பாரதி ராஜா இயக்கத்தில் உருவான 'கேப்டன் மகள்' என்ற படத்தில் நடித்திருந்தார் குஷ்பூ. இந்தப் படம் ஆனது ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தின் உடைய படப்பிடிப்பில் நடந்த சம்பவம் ஒன்றை குஷ்பூ சமீபத்தில் பகிர்ந்துள்ளார். 

அதாவது அவர் கூறுகையில், பாரதிராஜாவுக்கு பாம்பு என்றால் ரொம்பவே பயமாம். பாம்பை பார்த்தாலே தனக்கு வியர்த்து விறுவிறுக்க ஆரம்பித்துவிடும் அந்த அளவுக்கு பாம்பு மீது பயம் என்று அடிக்கடி கூறுவாராம். 


இந்நிலையில் படப்பிடிப்பு நடைபெற்ற தளத்தில் குஷ்பூ அங்கு வேறு ஒரு படப்பிடிப்பிற்காக பல் பிடுங்கப்பட்ட பாம்பு ஒன்று வைக்கப்பட்டிருந்ததை பார்த்துள்ளார். இதை பார்த்ததும் குஷ்பூ பாரதிராஜாவை பயமுறுத்த நினைத்துள்ளார்.

இதனையடுத்து பல் பிடுங்கப்பட்ட பாம்பை தனது கைகளில் எடுத்துக்கொண்டு பாரதி ராஜாவிடம் சென்று, சார் இங்கே பாருங்க பாம்பு என காட்டி பயமுறுத்தியுள்ளார். இதனை பார்த்த பாரதிராஜா அங்கிருந்து அரண்டு மிரண்டு ஓட்டம் பிடித்துள்ளார். 


இருப்பினும் அவரை விடாது தொடர்ந்து விரட்டிய குஷ்பூ அவரை பாம்புடன் துரத்திச் சென்றுள்ளார். பின்னர் ஒரு கட்டத்தில் படக்குழுவினர் குஷ்புவை நிறுத்தியுள்ளனர். இதையடுத்து ஓட்டத்தை நிறுத்திய பாரதிராஜா, உடல் முழுக்க வியர்த்துப் போய், நான் ஹார்ட் அட்டாக் வந்து செத்தால் அதற்கு அவள்தான் காரணம் என குஷ்பூவை கன்னாபின்னாவென தாறுமாறாக திட்டியுள்ளதாக குஷ்பூவே அப்பேட்டியில் கூறி இருக்கின்றார்.


Advertisement

Advertisement

Advertisement