• May 05 2024

கோபிக்கு தான் இரண்டு ஜோடி என்றால் எழிலுக்கும் இரண்டு காதலா?- பாக்கியலட்சுமி சீரியல் எதை நோக்கிப் போகுதோ தெரியல

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்வியில் தற்பொழுது டி ஆர் பியில் உச்சத்தில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. கணவன் மீதும் குடும்பம் மீதும் அக்கறை கொண்ட குடும்பப் பெண்ணின் வாழ்க்கையை இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

இந்த சீரியலில் தற்பொழுது பாக்கியாவுக்கு விவாகரத்தை கொடுத்து விட்டு வீட்டை விட்டு சென்ற கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்ளப் போகின்றார். அதற்கான வேலைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றது.


இது ஒருபுறம் இருக்க எழில் தயாரித்து வரும் படத்தின் கதையை மாற்ற சொல்லி தயாரிப்பாளர் கூறினாலும் எழில் அதனை செய்வதாக இல்லை. இதனால் அடுத்து எழில் வேறு ஒரு தயாரிப்பாளரை நாடிச் செல்லார் என்று கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தயாரிப்பாளரின் மகள் வர்சினி என்ற காரெக்டரில் நேற்றைய தினம் அறிமுகமாகியவர் தான் கீர்த்தி. இவர் அறிமுகமாகிய நாளிலேயே எழில் மீது காதல் வயப்பட்டது போல் காட்டப்பட்டுள்ளது. இதனால் இவர் எழில் மீது காதல் கொண்டு தயாரிப்பாளரிடம் சந்தர்ப்பம் வாங்கிக் கொடுப்பார் என்றும் கூறப்படுகின்றது.


அத்தோடு அமிர்தாவுக்கும் எழிலுக்கும் இடையில் இவர் சில காலம் பிரச்சினை செய்வார் என்றும் கூறப்படுகின்றது. எதிர் வரும் வாரங்களில் சீரியலில் மாற்றம் ஏற்படலாம் என்றும் நம்பப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement