• May 08 2024

காலில் விழுந்தாலும் புஷ்பா 2 படத்தில் ஆடமாட்டேன்- சமந்தாவின் முடிவுக்கு காரணம் என்ன தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மட்டுமன்றி தெலுங்கு சினிமாவிலும் வெற்றிக்கொடி நாட்டி நடிகையாக வலம் வருபவர் தான் சமந்தா.இவர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைத்னயாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார் சம்மதத்துடன் பிரமாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது.


ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை சிறப்பாக சென்றுகொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை திடீரென பிரிவில் முடிந்தது. இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இவர்களது பிரிவு செய்தி ஒட்டுமொத்த திரையுலகிலும் பேச்சுபொருளாக மாறியது. திருமணத்திற்கு பிறகு சமந்தா தொடர்ந்து நடித்ததுதான் இருவரும் பிரிந்ததற்கு காரணம் என பல காரணங்கள் கூறப்பட்டன.


இருப்பினும் சமந்தா இதையெல்லாம் பொருட்படுத்தாது நடித்து வருகின்றார்.முக்கியமாக அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான புஷ்பா படத்தில் ஊ சொல்லுறியா மாமா பாடலுக்கு இவர் நடனமாடியது சென்சேஷ்னல் ஆனது. அதுவரை சமந்தாவை அவ்வளவு கவர்ச்சியாக பார்க்காதவர்கள் அந்தப் பாடலில் சமந்தாவை அப்படி பார்த்ததும் கிறுகிறுத்து போயினர்.

இப்படி அவரது கேரியரின் கிராஃப் உச்சத்தை நோக்கி சென்றுகொண்டிருந்த சூழலில் அவருக்கு மையோசிடிஸ் எனும் அரிய வகை தோல் நோய் வந்தது. இதுகுறித்து அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ரசிகர்கள் அனைவரும் அதனை கேட்டு அதிர்ச்சி அடைய; தன்னம்பிக்கை இழக்காத சமந்தா தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு தற்போது அந்த நோயிலிருந்து மீண்டிருக்கிறார்.


இந்நிலையில் முழுவதுமாக நோயிலிருந்து மீண்ட சமந்தா ஒர்க் அவுட், கோயில் வழிபாடு என பிஸியாக இருக்கிறார். அதுமட்டுமின்றி அவர் நடிப்பில் உருவாகியிருக்கும் சாகுந்தலம் படமும் விரைவில் வெளியாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க; புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் சமந்தாவை ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட படக்குழு  அணுகியபோது திட்டவட்டமாக அதற்கு சமந்தா மறுத்துவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.


சினிமாவுக்குள் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் சமந்தா கடந்த காலங்களில் தனக்கு நடந்த கசப்பான நிகழ்வுகளை மறப்பதற்கு ஒரே வழி மீண்டும் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதுதான். எனவே திரும்பவும் கவர்ச்சி நடனம் என்ற பாதைக்குள் சென்றுவிட்டால் மீண்டும் வெளியே வர முடியாது என முடிவெடுத்ததால்தான் புஷ்பா 2வுக்கு அவர் நோ சொல்லிவிட்டார் என கூறப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement