• Apr 30 2024

"என் குழந்தைகிட்ட இதை நான் பண்ண மாட்டேன்.."-குடும்ப வாழ்க்கை குறித்து ஓபனாக சொன்ன சாய் பல்லவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரையில் தன்னுடைய நடன திறமையை வெளிப்படுத்தும் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி.சிறு வயதில் இருந்தே நடனத்தின் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக எவ்வித நடன பயிற்சி மையங்களுக்கும் செல்லாமல், ஐஸ்வர்யாராய், மாதுரி தீட்சித், போன்ற நடிகைகளின் நடனத்தை பார்த்து பார்த்து டான்ஸில் மின்னியவர்.

நடனத்தில் மட்டுமின்றி படிப்பிலும் செம சுட்டி தான் சாய் பல்லவி. ஜார்ஜியாவில் இருதய நோய் நிபுணருக்கான மருத்துவ பட்டம் பெற்றவர்.பின்னர் எதேர்ச்சியாக பிரேமம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட சாய்பல்லவி, மலையாள திரை உலகின் மூலம் நடிப்பில் கால் பதித்தார்.


இவருடைய முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், சாய்பல்லவி நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தெலுங்கு, மலையாளம் ,போன்ற மொழிகளில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதிக மேக்கப் இல்லாத சிவந்த நிறத்தில் இருக்கும் இவரது முகமும், பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கும் இவரது தோற்றமும் பல ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்த நிலையில் இவர் அண்மையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார். அதில் தனக்கு பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தை குட்டையாக ஆடை அணிந்தால் தடுக்கமாட்டேன். குட்டையாக ஆடை அணிவது அவளுக்க கம்பர்டபிள் என்றால் அணியட்டும். புடிச்சு எல்லாம் வைச்சு மற்றவங்க என்ன நினைப்பாங்க என்று சொல்ல மாட்டேன்.


பெண்களின் உடல் சாமி மாதிரி என்று சொல்லுறதை எல்லாம் விட்டிட்டு உடம்பும் ஆடை மாதிரி தான் அதை பெருஷாக பொருட்படுத்தக் கூடாது என்று சொல்லிக் கொடுப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.











Advertisement

Advertisement

Advertisement