எல்லா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை விட இப்போது பிக்பாஸ் 6வது சீசன் தான் படு சூடாக ஓடிக் கொண்டிருக்கிறது. வழக்கமாக இல்லாமல் நிகழ்ச்சியின் ஆரம்பத்திலேயே பிக்பாஸ் பல டாஸ்குகள் கொடுத்து வருகிறார்.
போட்டியாளர்களும் கடுமையாக போட்டிபோட தயாராகிவிட்டார்கள். 20 போட்டியாளர்கள் ஆரம்பத்தில் இருந்தார்கள், இப்போது மைனா நந்தினியும் வைல்ட் கார்ட்டு என்ட்ரீயாக நுழைந்துள்ளார்.
நேற்றைய தினம் கதை சொல்லும் டாஸ்க் ஆரம்பமாகியது. சிலரது கதை ஹவுஸ்மேட்டிற்கு பிடிக்காமல் போனது. ஆனால் தனலக்ஷ்மி நிவா மைனா ஆகியோரின் கதை ஹேவுஸ்மேட்டைக் கவர்ந்திருந்தது.
அந்த வகையில் தற்பொழுது ஷிவின் தனது கதையைக் கூறியுள்ளார்.திருநங்கையாக இருக்கும் இவர் தன்னைப் போன்றவர்கள் படும் துன்பத்தை எடுத்துக் கூறியுள்ளார் இது இரண்டாவது ப்ரோமோவாக வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!