• May 08 2024

“நான் ஒன்றும் செய்யல நமீதா தான் என் கிட்ட பேச மறுத்திட்டாங்க“- பில்லா திரைப்படத்தின் ரகசியத்தை பகிர்ந்த நயன்தாரா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் அனைத்து மொழி ரசிகர்களையும் கவர்ந்த முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நயன்தாரா. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருப்பதோடு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.

இவர் கடந்த 9ம் திகதி தனது காதலனான விக்னேஷ் சிவனை பெற்றோர் சம்மதத்துடன் மிகவும் பிரமாண்ட முறையில் கரம் பிடித்தார். திருமணத்திற்குப் பிறகும் திரைப்படங்களில் இவர் நடிப்பார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.

நயன்தாராவின் திரை பயணத்தில் மிகமுக்கியமான படங்களில் ஒன்று பில்லா. இப்படத்தில் கதாநாயகனாக அஜித் நடித்திருப்பதோடு விஷ்ணு வர்தன் இப்படத்தை இயக்கியிருந்தார்.

அஜித் இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் நயன்தாரா மற்றும் நமிதா இருவரும் ஒன்றாக இணைந்து நடித்திருப்பார்கள்.பில்லா படம் வெளிவந்த காலகட்டத்தில் நயன்தாராவிற்கும், நடிகை நமிதாவிற்கும் இடையே சண்டை என்பது போல் பல தகவல்கள் வெளிவந்தது.

இந்நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் நயன்தாராவிடம் கேள்வி கேட்ட போது, " பில்லா படப்பிடிப்பு ஆரம்பம் ஆனபோது, இருவரும் சகஜமாக தான் பேசிக்கொள்வோம். ஆனால், அதன்பின் சில நாட்களில் என்னிடம் அவர் பேசாமறுத்துவிட்டார். அனைவரிடமும் பேசும் நமிதா, என்னிடம் மட்டும் பேசவேமாட்டார். அதற்கு என்ன காரணம் என்று எனக்கு இதுவரை தெரிந்ததே இல்லை. நானும் ஏன் என்னிடம் பேச மாடீர்களா என்று நமீதாவிடம் கேட்கவும் இல்லை. அதனால், அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டோம் " என்று கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement