• Apr 30 2024

கிரிக்கெட் மட்டையை கையில் கூட தொடாமல் வளர்ந்தவள் நான்; நடிகை டாப்ஸி

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் தமிழ், ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை டாப்ஸி. குறிப்பாக தமிழில் 'ஆடுகளம்' படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்த இவர் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து தனக்கே உரிய ஒரு பாணியில் நடித்து வருவது வழமை.

இவர் சினிமா பிரபலமாக இருந்தாலும் தனது சொந்த விஷயங்களை எப்போதும் சினிமாவோடு ஒன்றிணைப்பதில்லை. குறிப்பாக சினிமாவினுள் நுழைந்து 15 வருடங்களைக் கடந்து விட்ட இவர் தனது கேரியரில் மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார். அதாவது இவ்வளவு காலமும் காதல் படங்களிற்கு முக்கியத்துவம் கொடுத்த இவர், சமீபத்தில் அதனை விடுத்து கதையில் நாயகிக்கு முக்கியத்தும் கொடுக்கும் படங்களில் நடித்து வருகின்றார்.

விளையாட்டு நிகழ்வுகளில் அதிகளவு ஆர்வம் காட்டி வரும் டாப்ஸி தற்போது கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜின் வாழ்க்கை பயணத்தை மையமாக கொண்டு உருவாகி வரும் ‘சபாஷ் மிது’ என்ற படத்தில் நடித்து வருகின்றார். மேலும் 'சபாஷ் மிது' என்ற இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் இப்படமானது ஜூலை 15-ஆம் திகதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது இப்படத்தினுடைய புரமோஷன் நிகழ்வுகளும் இடம்பெற்ற வண்ணமே இருக்கின்றன.

இவ்வாறான ஒரு புரமோஷன் நிகழ்வில் சமீபத்தில் நடிகை டாப்ஸி கலந்து கொண்டு பேசும் போது "கிரிக்கெட் மட்டையை கையில் கூட தொடாமல் வளர்ந்தவள் நான், இந்திய கிரிக்கெட் பெண் வீராங்கனையான மிதாலி ராஜின் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குப் பெரும் சவாலாக இருந்தது" எனக் கூறியிருக்கின்றார். மேலும் அந்நிகழ்ச்சியில் அவர் பேசுகையில் "இதற்காக நான் உடல் ரீதியாக கடினமான பல பயிற்சிகளை மேற்கொண்டிருக்கின்றேன், அடுத்ததாக ஆவெஞ்சர் என்ற கதாபாத்திரத்திலும் நடிக்க விரும்புகின்றேன்" எனத் தெரிவித்திருக்கின்றார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் ரசிகர்கள் "யாரவது இதைப் பற்றி மார்வெலிடம் சொல்லுங்கள். சொன்னால் ஏதாவது செய்யக்கூடும்" என்று தமது கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement