• May 07 2024

தனுஷ்-அனிருத் கூட்டணியின் "மேகம் கருக்காதா" பாடல் வெளியீடு…எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிகர் என்று அறியப்பட்டதை விட சூப்பர் ஸ்டாரின் மருமகனாகவே அதிகளவில் அறியப்பட்டிருக்கின்றார். அதுமட்டுமல்லாது திரைப்படத் தயாரிப்பாளர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்டும் விளங்கி வருகின்றார்.

தொடர்ந்து விவாகரத்து குறித்த பல சர்ச்சைகளில் சிக்கி வந்த நடிகர் தனுஷ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் இவருடன் இணைந்து திரைப்பிரபலங்களான இயக்குநர் இமயம் பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், ராஷிகண்ணா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தின் உடைய இறுதிக்கட்டப் பணிகள் யாவும் முடிவடைந்த நிலையில் தொழில்நுட்பப் பணிகள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக இடம்பெற்று வருகின்றன. மேலும் இந்தப் படமானது ஆகஸ்ட் 18-ஆம் திகதி வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் அதிகார பூர்வ அறிவிப்பு ஒன்றினை ஏற்கெனவே வெளியிட்டு இருக்கின்றார்கள்.

மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளதாக கூறப்படுகிறது. அத்தோடு 7 ஆண்டுகள் கடந்து இப்படத்தில் மறுபடியும் அனிருத்தும் தனுஷும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரியளவிலான எதிர்பார்ப்புக் கிளம்பியிருக்கின்றது. இந்த நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த "தாய்க்கிழவி…" என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி பலரிடம் இருந்தும் அமோக வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக தற்போது இரண்டாவது பாடல் தொடர்பான வெளியீட்டு அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதாவது 'திருச்சிற்றம்பலம்' என்ற படத்தின் இரண்டாவது பாடல் இந்த மாதம் 15-ஆம் திகதி வெளியாகும் என தகவல் வெளியாகி இருக்கின்றது. "மேகம் கருக்காதா…." என்று தொடங்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளமையால் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இப்போதிருந்தே பலத்த எதிர்பார்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement