தயாரிப்பாளர் ரவீந்தரும் பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியும் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் திருமணம் செய்துகொடார்கள். இவர்களுடைய திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிந்தாலும், சிலர் தவறாக பேசினார்கள்.
இதனால் பல சர்ச்சைகள் ரவீந்தர் மீது சமூக வலைத்தளத்தில் எழுந்தது.அந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் சரியான பதிலடியை ரவீந்தர் கொடுத்தார்.
இந்நிலையில், தயாரிப்பாளர் ரவீந்தர் தீடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தல தீபாவளி கொண்டாட இருந்த ரவீந்தருக்கு இப்படி ஆகிருச்சே என்று பலரும் கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்றைய தினம் இவர்பிரபல சேனல் ஒன்றிற்கு வீடியோ கோஃ மூலம் பேசியிருந்தார். அதில் அவர் நான் வைத்திய சாலையில் இருப்பதாகவும் கடுமையான நோயில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றது. ஆனால் அது எதுவும் உண்மை இல்லை. நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவே இல்லை நான் வீட்டில நல்லாத் தான் இருக்கின்றேன் நாளைய தினம் சிறப்பாக தல தீபாவளியைக் கொண்டாடவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.
அதே போல் இன்று தனது மனைவியுடன் தல தீபாவளி கொண்டாடும் புகைப்படத்தை எடுத்து பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!