பிக்பாஸ் 6வது சீசன் 20 போட்டியாளர்கள் கலந்துகொள்ள தொடங்கியது. அவர்களை பற்றி மக்கள் அறிந்துகொண்டு வர திடீர் எண்ட்ரீயாக சீரியல் நடிகை மைனா நந்தினி உள்ளே நுழைந்தார்.தற்பொழுது 21 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.
ஒவ்வொரு வாரமும் வித்தியாசமான டாஸ்க்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பானது மிகவும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் நேற்றைய தினம் கதை சொல்லும் டாஸ்க் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தமது கதைகளை சொல்லுவார்கள்.
அந்த கதையை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் பஸர் அடிக்க வேண்டும். இவ்வாறு மூன்று பஸரும் அடித்து விட்டால் கதை சொல்பவரின் கதை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம். அந்த வகையில் இன்றைய தினம் மகேஷ்வரி, வி.ஜே கதிரவன் ,மைனா ஆகியோர் கதை கூறுகின்றனர்.
இதில் மகேஷ்வரி மற்றும் வி.ஜே கதிரவனின் கதை நிகாரிக்கப்பட்டு விடுகின்றது. நந்தினிக்கு இரண்டு பஸர் மட்டும் அடிக்கப்பட்டு விடுகின்றது. இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியதைக் காணலாம்.
Listen News!