நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்று நூறு கோடிக்கு மேல் வசூலில் அள்ளிக் குவித்தது. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம அதிகமகாக உள்ளது.
அந்த வகையில் தற்பொழுது பிரின்ஸ் என்னும் படத்தில நடித்து முடித்துள்ளார்.இப்படத்தை தெலுங்கு இயக்குநரான அனுதீப் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மரியா என்பவர் நடித்துள்ளார்.இப்படம் தமிழ் மற்றும் தெலுங்க ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
இப்படம் திபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருப்பதால் படக்குழு ப்ரோமோஷன்களில் பிசியாக இருக்கின்றது. அந்த வகையில் ஒரு ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சத்யராஜ் இப்படத்தில் எவ்வாறு கமிட்டானார் என்பது பற்றி பேசியுள்ளார் சிவகார்த்திகேயன்.
சத்யராஜ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதையடுத்து பிரின்ஸ் படத்தில் இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக கலகலப்பான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தில் சத்யராஜை நடிக்க வைக்க இயக்குநர் முதலில் தயங்கினாராம். ஏனென்றால் சத்யராஜ் பாகுபலி படத்தில் கட்டப்பா போன்ற ரோலில் நடித்து அசதியுள்ளதால் ஜாலியான கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்தால் சரியாக இருக்காது என எண்ணினாராம் இயக்குநர்.
ஆனால் சிவகார்த்திகேயன், சத்யராஜை நீங்கள் கட்டப்பாவாக மட்டும் தான் பார்த்திருக்கிறீர்கள், நடிகன், அமைதிப்படை போன்ற நக்கலான சத்யராஜை பார்த்திருக்கமாடீர்கள் என நினைக்கின்றேன் என்றாராம் . இதையடுத்து சிவகார்த்திகேயனின் பேச்சை கேட்டு சத்யராஜை இப்படத்தில் நடிக்க வைத்தாராம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
Listen News!