இசை மேதை இளையராஜா தனது பாடல்களுக்கான காப்புரிமையை மீறி பயன்படுத்தியதாக சோனி நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்து, சோனி நிறுவனத்திற்கு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கில், இசையமைப்பாளர் இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவரது பாடல்களை வணிக ரீதியாக (Commercially) பயன்படுத்தி வந்ததற்கு எதிராக நீதிமன்றம் சோனி நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இளையராஜா தமிழ் சினிமாவில் மட்டும் அல்லாமல் இந்திய இசைத்துறையின் ஒரு பரபரப்பான புரட்சி வீரர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்து வந்துள்ளார். இவர் இசையமைத்த பாடல்கள் பல நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலான பாடல்கள் இன்றும் மக்கள் மனதில் இடம் பெற்றுள்ளன.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக, இளையராஜா தனது பாடல்கள் மற்றும் இசைக்கான காப்புரிமை (Copyright) மீறல் தொடர்பாக பல்வேறு நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதில் Sony Music Entertainment நிறுவனத்தின் மீதே முழு வழக்கும் தொடரப்பட்டது.
மேலும், இளையராஜா தனது பாடல்கள் மீதான முழு காப்புரிமையும் தன்னிடம் இருப்பதாகவும், அந்த உரிமைகள் எவருக்கும் மாற்றப்பட்டதில்லை என்றும் கூறினார். இந்நிலையில், இளையராஜாவின் அனுமதி இல்லாமல் அவர் உருவாக்கிய இசை மற்றும் பாடல்களை வணிகரீதியாக பயன்படுத்துவது சட்டவிரோதமாகும் என அவர் வாதிட்டார்.
தற்பொழுது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இது தொடர்பான விசாரணையை 2025 அக்டோபர் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Listen News!