• May 05 2024

'மின்சாரக் கண்ணா' படத்தில் முதலில் நடிக்க இருந்தது இவரா..? அப்போ ரம்பா எப்படி வந்தாங்க... நம்பவே முடியலயே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக காலடி எடுத்து வைத்த இவர் இன்று திரையுலகின் மிகப்பெரிய வெற்றி நாயகனாகத் திகழ்ந்து வருகின்றார். இவரின் நடிப்பிற்கும், நடனத்திற்கும் மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம். 


இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'வாரிசு' என்ற படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வம்சி இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புக்கள் யாவும் அடுத்த மாதம் நிறைவடைகிறது. மேலும் இப்படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் 'தளபதி 67' படம் உருவாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்குவதாகத் தகவல்கள் சமீபத்தில் வெளியாகி இருக்கின்றன.



இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் முன்னர் உருவான ஒரு திரைப்படம் பற்றிய தகவல் ஒன்று சமீபத்தில் வெளியாகி இருக்கின்றது. அதாவது கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ஆம் ஆண்டு விஜய், ரம்பா, மணிவண்ணன், குஷ்பூ என பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் 'மின்சார கண்ணா'.


இப்படத்தின் கதையானது ஒரு பெண் தனது கணவர் செய்த கொடுமையால் ஆண்களை வெறுத்து வாழ்க்கையில் ஆண் வாசமே இருக்க கூடாது எனப் பல பெண்கள் சூழ வாழ்கிறார். அவரது தந்கையோ ஒருவரை காதலித்து அதை தனது உயிருக்கு உயிரான அக்காவிடம் கூற பயந்து ஒரு டிராமா செய்கிறமையை மையமாக கொண்டதாக அமைந்திருக்கின்றது.



இப்படம் முழுவதும் கொஞ்சம் காமெடியாகவும், சென்டிமென்ட்டாகவும் அமைந்து இருந்தது. அந்தவகையில் இந்த படத்தில் நடிகை ரம்பாவிற்கு பதிலாக முதலில் நடிக்க இருந்ததே வேறொரு நடிகை தானாம். அவர் வேறுயாரும் இல்லை நடிகை ரோஜா தான் எனக் கூறப்படுகின்றது. அத்தோடு சில காட்சிகளிலும் அவர் நடித்துள்ளாராம். பின்னர் சில காரணங்களால் ரோஜா வெளியேற அவருக்கு பதில் ரம்பா நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.



Advertisement

Advertisement

Advertisement