• Apr 27 2024

அவன் பல தயாரிப்பாளரின் வாழ்க்கையை காலி செய்திருக்கிறான்-மேடையில் செல்வராகவனை அசிங்கப்படுத்திய பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய முன்னணி இயக்குனர்கள் பலர் காணப்படுகின்றனர். இவர்களில் மிகவும் முக்கியமானவர் தான் இயக்குநர் செல்வராகவன். இவர் இயக்கிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே அதிக வரவேற்பையும் பெற்றிருக்கின்றன.

அந்த வகையில் இவர் இயக்குநராக மட்டுமின்றி தற்போது நடிகராக பிஸியாக உள்ளார். அதாவது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

மேலும் இவர் இயக்கத்தில் தன் தம்பி நடிகர் தனுஷை அறிமுகப்படுத்தி உச்சமடையச்செய்தவர் செல்வராகவன். 11 வருடம் கழித்து நானே வருவேன் படத்தின் மூலம் தனுஷுடன் இணைந்து படத்தினை எடுத்து வெளியிட்டார். மேலும் இப்படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக 29 ஆம் தேதி செப்டம்பர் மாதம் வெளியானது. படம் கலவையான விமர்சனம் பெற்றாலும் பொன்னியின் செல்வன் படத்தினால் வசூலில் அடிவாங்கியது.

இவ்வாறுஇருக்கையில், மூத்த தயாரிப்பாளராக திகழ்ந்து வரும் கே ராஜன் அவர்கள் கமல் ஹாசனை பற்றி கடுமையாக விமர்சித்து பேசியும் தயாரிப்பாளர்களை டாப் நடிகர்கள் மதிப்பதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தயாரிப்பாளர்கள் படும் கஷ்டத்தினை பல மேடைகளில் பேசி வந்த கே ராஜன், ஒரு நிகழ்ச்சியில் செல்வராகவனை கேவலப்படுத்தி பேசியுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

செல்வராகவனா, அவன் பல தயாரிப்பாளர் வாழ்க்கையை காலி செய்தவன். அத்தோடு நல்ல நேரத்தில் எந்த பேரை சொல்ற என்றும் ஆயிரத்தில் ஒருவன் பட தயாரிப்பாளரை காலி செய்தவன் செல்வராகவன் என்று கூறியுள்ளார். மேலும் பல குடும்பத்தை பல இயக்குனர்கள் வாழ்க்கையை காலி செய்திருக்கிறார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement