தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களாக திகழ்பவர்கள் தான் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித்.
இவர்கள் இருவரும் அவர்களின் அடுத்த படங்களில் பிஸியாக நடித்து வந்தனர். அத்தோடு அஜித் தனது துணிவு திரைப்பட ஷூட்டிங்கை முடித்து கொண்டு தனது பைக் ரைட்-யை ஆரம்பித்துள்ளார்.
விஜய்யின் வாரிசு பட ஷூட்டிங் இன்னும் சில காட்சிகள் மீதம் இருப்பதாக கூறப்படுகின்றது. வாரிசு திரைப்படம் ஏற்கனவே பொங்கலுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது துணிவு திரைப்படமும் வெளியாக இருப்பதை தெரிவித்து உள்ளனர்.
அந்த வகையில் ஒரே நாளில் இந்த இரண்டு திரைப்படங்கள் வெளியாகாமல் அடுத்த நாட்களில் வெளியாகுமென கூறப்பட்டது. இதற்கிடையே இப்படங்கள் வெளியாக முக்கிய காரணமே நடிகர் அஜித் தான் என கூறப்படுகின்றது.
ஆம், அவர் தான் வாரிசு திரைப்படம் வெளியாகும் போதே துணிவு திரைப்படத்தை வெளியிடலாம் என கூறியதாகவும், விஜய்யின் மார்க்கெட்-யை குறைகவே இப்படி அஜித் செய்ததாகவும் மூத்த பத்திரிக்கையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.
மேலும் இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை ஆனால் இப்படியொரு தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Listen News!