• May 04 2024

அவருக்கு ஏற்கனவே நாலு கல்யாணம் ஆகி இருந்திச்சு என்னை ரொம்ப ஏமாத்திட்டாரு- நடிகை பேபி அஞ்சுவின் எமோஷனலான பேட்டி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உதிரிப்பூக்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியவர் தான் நடிகை பேபி அஞ்சு. இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். குழந்தை நட்சத்திரமாக மட்டுமல்லாது கதாநாயகியாகவும் நடித்திருக்கின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.அப்போது அவருடைய திருமண வாழ்க்கை குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் பின்வருமாறு கூறியிருந்தார்.


அதாவது இவர் ஹுரோயினாக நடித்துக் கொண்டிருந்த காலத்தில் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஷுட்டிங் முடிஞ்சு ரூமுக்குள் வந்த படுத்தால் யாராவது வந்து கதவை தட்டுவாங்க நான் போய் படக்குழுவிடம் சொல்வேன் அது சரியா வரல இதனாலேயே நிறைய படத்திலிருந்து விலகிட்டேன்.

இதைத் தொடர்ந்து எனக்கு படங்களில் நடிக்க விருப்பம் இல்லாமல் போச்சு அதனால தான் முத்து படத்தில் வில்லனாக நடிச்ச பிரபாகரனை கல்யாணம் பண்ணிக்கிட்டு செட்டில் ஆகிட்டேன். அந்த கல்யாணம் பண்ணும் போது எனக்கு 17 வயது தான். கல்யாணம் பண்ணினதுக்கு அப்பிறம் தான் அவரை பற்றி புரிஞ்சுது.


அதாவது நான் கன்னட படத்தில் நடிச்சிட்டு இருக்கும் போது தான் அவர் லவ் புரபோஸ் பண்ணினாரு. முதலில் நோ சொல்லிட்டேன் பின்பு ஓகே சொல்லி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.ஆனால் அவருக்கு எனக்கு முதலே நாலு கல்யாணம் நடந்திருக்கு

எங்க அப்பாவை விட பெரியவர் அவர் என்னை விட வயசில பெரிய பசங்க எல்லாம் அவங்களுக்கு இருந்திச்சு. இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்பிறம் தான் தெரிஞ்சது. எனக்கு பிறகும் பெண்களோட தொடர்பு வச்சிருந்தாரு. இதனால சொல்லி பார்த்தேன் அவர் கேட்கல பின்னர் எங்க அம்மா என் குழந்தையை எடுத்திட்டு போய்ட்டாங்க.அதுக்கு பிறகு நானும் இவர் கூட சண்டை போட்டுட்டு வீட்டை போயிட்டேன்.


அதுக்கு பிறகு மூன்று நாள் கழிச்சு வந்து என்னை தன்னுடன் வர சொல்லி கூப்பிட்டாரு ஆனால் நான் போகலை. அதுக்கு பிறகு இரண்டு வருஷம் கழிச்சு அவங்க இறந்திட்டதாக கேள்விப் பட்டேன். எங்க அம்மா போகலாம் வா என்டாங்க ஆனால் நான் போகவே இல்லை. இதுக்கப்பிறம் இன்னொரு கல்யாணம் பண்ணனும் என்று தோனல. என் பையனுக்காகவே இருப்போம் என்று இருந்தது தான் என்றும் இன்னும் சில சுவாரஸியமான தகவல்களையும் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement