தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகையாகத் திகழ்பவர் நடிகை லாஸ்லியா மரியநேசன். இலங்கையைச் சேர்ந்த இவர் 2015-ஆம் ஆண்டு தொடக்கம் 2019-ஆம் ஆண்டு வரை இலங்கையின் பிரபல தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், செய்தி வாசிப்பாளராகவும் கடமையாற்றினார். பின்னர் தன் பணியில் இருந்து விலகி 2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் என்ற பிரபல நிகழ்ச்சியின் சீசன் 3 இல் போட்டியாளராக பங்குபற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பங்குபற்றியதன் மூலம் பல ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்றுக் கொண்டார்.
மேலும் இவர் 2020-ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடித்த 'பிரண்ட்ஷிப்' என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக திரைப்படத்துறையில் அறிமுகமானார். இத்திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமாகும் வாய்ப்பைப் பெற்றுக்கொண்டார்.
இதை தொடர்ந்து அடுத்ததாக கூகுள் குட்டப்பா எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். எனினும் இதுமட்டுமின்றி தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.படங்கள் மட்டுமின்றி அவ்வப்போது விளம்பரங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் லாஸ்லியா.அத்தோடு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவருடைய தந்தை மரணமடைந்தார்.
இந்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்நிலையில் நடிகை லாஸ்லியா தனது தாய் மற்றும் இரு தங்கைகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்...
Listen News!