• May 06 2024

மாரிக்காக சங்கரபாண்டியனை ஏமாற்றிய ஹாசினி- சூர்யாவை வைத்து கோவிலில் நடக்கும் பூஜை- மாரி சீரியலின் இன்றைய எப்பிஷோட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல் தான் மாரி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 தாரா சாமியார் மந்திரிச்சு கொடுத்த கயிற்றை சூரியாவின் கையில் கட்டி விட்டு நாளைக்கு பூஜை இருப்பதாகவும் நீயும் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்க சூர்யா வரேன் என்று சொல்கிறான். அதை மறைந்து இருந்து பிரியா கவனிக்கிறாள்.மறுநாள் காலை தாரா, ஸ்ரீஜா, சங்கரபாண்டி என மூவரும் சூர்யாவை கோயிலுக்கு அழைத்துச் செல்ல பிரியா மாரியிடம் ஹாசினி அண்ணி கோயிலில் வெயிட் பண்ணுகிறார்கள் நீங்க கிளம்பி போங்க என்று மாரியை அனுப்பி வைக்கிறாள்.


பின்னர் கோயிலுக்குள் ஜாஸ்மின் வெளியே காரில் காத்திருக்க சூர்யா உட்பட எல்லோரும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது சாமியார் கோயில் குளத்தில் குளித்து விட்டு வரும்படி சூர்யாவை அனுப்பி வைக்க சங்கரபாண்டியன் சூர்யாவை அழைத்துச் செல்கிறான்.

அடுத்து ஹாசனியும் மாரியும் கோயிலுக்கு வர மாரி எதுக்கு என்று கேட்க ஹாசினி சமாளித்து கோயில் ஓரமாக வரவைத்து இங்கே வெயிட் பண்ணு என்று சொல்லிவிட்டு போகிறாள். குளித்து முடித்துவிட்டு பூஜைக்கு வரும் சூர்யா சாமி முன்னாடி உட்கார்ந்து பூஜை செய்கிறான். சாமியார் பிரசாதத்தை அந்த பொண்ணுக்கு கொண்டு போய் சாப்பிட கொடுங்க என்று சொல்லிக் கொடுக்க சொல்ல தாரா சங்கரபாண்டியிடம் ஜாஸ்மினுக்கு கொடுத்து விடு என்று சொல்கிறாள்.

இதனால் சங்கரபாண்டியும் அந்த பிரசாதத்தை ஜாஸ்மினுக்கு கொடுக்கப் போக பின்னாலேயே ஹாசினி பாலோ செய்தபடி போகிறாள். காரில் ஜாஸ்மின் பாட்டு கேட்டுக் கொண்டு கொண்டிருக்க கதவு தட்டியும் கேட்காதால் சங்கர பாண்டி பிரசாதத்தை கார் மேலே வைத்துவிட்டு கதவு தட்ட ஹாசினி அந்த பிரசாதத்தை எடுத்துக் கொண்டு போகிறாள்.அடுத்து ஜாஸ்மின் கதவு திறந்தவுடன் சங்கரபாண்டி பிரசாதத்தை பார்க்க பிரசாத்தை காணவில்லை பயந்தபடி சமாளித்துவிட்டு வேறு ஒன்றும் இல்லை சும்மாதான் தட்டினேன் என்று சொல்லிவிட்டு வந்து விடுகிறான்.


 மேலும் தாராவிடம் ஜாஸ்மின் பிரசாதத்தை சாப்பிட்டு விட்டதாக பொய் சொல்லி விடுகிறான்.மறுபக்கம் கோவில் பின்னால் ஹாசினி மாரியிடம் இந்த பிரசாத்தை சாப்பிட சொல்லி கொடுக்க மாரி எதுக்கு என்று கேட்க காரணம் இல்லாமல் சாப்பிடு என்று சொல்லி சாப்பிட வைக்கிறாள். இறுதியாக சாமியார் விளக்கேற்ற சொல்ல ஹாசினி மாரியை விளக்கேற்ற சொல்கிறாள். மாரியும் சூர்யாவும் ஒரே நேரத்தில் விளக்கு ஏற்றுகின்றனர். இதனை அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை எப்பிஷோட பார்த்தால் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



















Advertisement

Advertisement

Advertisement