• May 19 2024

இவங்களை தயவு செய்து உள்ளே கூப்பிடுங்க பிக்பாஸ்... மீண்டும் மீண்டும் கோரிக்கை விடுக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 6ஆனது பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அதேநேரத்தில் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் நேற்றைய தினம் ஜனனியை அனுப்பி வைத்தார்கள். 


இவ்வாறாக வீட்டில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கை வாராவாரம் குறைந்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தான் பார்வையாளர்கள் அந்த விஷயத்தை எதிர்பார்த்தனர். அதாவது பிக்பாஸ் வீட்டிற்கு ஒயில்டு கார்டு மூலம் ஆட்கள் வருவது வழமையான ஒன்று தான். 

அந்தவகையில் இந்த சீசனில் வி.ஜே. பார்வதி தான் அந்த ஒயில்டு கார்டு என்ட்ரி என ஏற்கெனவே தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து "பார்வதி வேண்டாம் வனிதா அக்காவை அழைத்து வாங்க பிக்பாஸ். போட்டியாளர்கள் எல்லாம் சுவாரஸ்யமாக இல்லை. அதனால் தான் வனிதா அக்காவை கேட்கிறோம்" என்றார்கள் பிக்பாஸ் பார்வையாளர்கள்.


இந்நிலையில் தற்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு சிலரே இருப்பதால் ஒயில்டு கார்டு என்ட்ரிக்கான நேரம் என்று பலராலும் கருதப்பட்டது. ஆனால் பிக் பாஸுக்கு அப்படி ஒரு ஐடியாவே இல்லையாம். ஒயில்டு கார்டு என்ட்ரியா, அதற்கு வாய்ப்பே இல்லீங்கோ என பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக தற்போது தகவல் ஒன்று வெளியாகி பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்திருக்கிறது.

மேலும் "ஒயில்டு கார்டு என்ட்ரி ஏன் இல்லை என்பது எங்களுக்கு இப்போவே தெரிந்தாகணும் பிக்பாஸ்" என பார்வையாளர்கள் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமல்ல நாங்கள் யாராவது போட்டியாளரை காப்பாற்ற ஓட்டு போட்டால் நீங்கள் அதை செல்லா ஓட்டாக ஆக்கிவிட்டு அவரை வெளியேற்றிவிடுகிறீர்கள். இந்நிலையில் குடவோலை முறை தான் சிறந்தது. இனி அதன்படியே ஒருவரை தேர்வு செய்து வெளியேற்றலாம் என உலக நாயகன் கமல் ஹாசன் வேறு நேற்றைய தினம் தெரிவித்துள்ளார்.


அத்தோடு "எங்களுக்கு படு அநியாயம் பண்றீங்க பிக்பாஸ். ஒயில்டு கார்டு என்ட்ரியாக யாரையாவது உடனே வீட்டிற்குள் அழைத்து வாங்க. உள்ளே இருக்கும் ஹவுஸ்மேட்ஸ் தினமும் மொக்கை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ இந்த அசீமும், தனலட்சுமியும் இருப்பதால் கொஞ்சம் பார்க்கும்படி நிகழ்ச்சி இருக்கிறது. இல்லை என்றால் இந்த சீசன் பல்பு வாங்கியிருக்கும் என்று பார்வையாளர்கள் நொந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.


இன்னொரு முக்கிய விடயம் என்னவெனில் வனிதா அக்காவை ஒயில்டு கார்டாக இல்லாவிட்டாலும் விருந்தாளியாகவாவது வீட்டுக்குள் அழைத்து வாங்க பிக்பாஸ். ஒரு இரண்டு நாளுக்கு பிக்பாஸ் வீடு பரபரப்பாக இருக்கும். எங்களுக்கும் நன்றாக பொழுது போகும் என பார்வையாளர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கை நிறைவேறுமா என்பதை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement