• May 18 2024

தான் செய்ததை நினைத்து கதறி அழும் கோதை- அத்தையிடம் பேசச் சொல்லி தமிழை வற்புறுத்திய சரஸ்வதி-Thamizhum Saraswathiyum Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கோதை வெளியில் நின்று தன்னுடைய வீட்டைப் பார்த்துக் கொண்டிருக்கின்றார். அப்போது நடேசன் தமிழ் எல்லார் கூடவும் பேசிறான் என் கூட மட்டும் பேசல என்று தானே யோசிச்சிட்டு இருக்கிற அதெல்லாம் யோசிக்காதம்மா தமிழுக்கு நம்ம மேல எந்த கோவமும் இல்லை, நான் கூட தான் அவனை தப்பா நினைச்சேன். ஆனால் அவன் எல்லாத்தையும் மறந்திட்டான்மா நீ கவலைப்படாதம்மா என்று ஆறுதல்ப்படுத்துகின்றார்.


தொடர்ந்து இதனைப் பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி எல்லார் கிட்டையும் பேசிட்டு இருக்கிறீங்க அத்தை கூடவும் பேசலாம் தானே, எதுக்காக அவங்க கூட பேசாமல் இருக்கிறீங்க, நீங்க பேசினால் அவங்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் தானே, வந்து பேசுங்க வாங்க என்று சொல்ல தமிழ் அதெல்லாம் உனக்கு சொன்னால் புரியாது சரஸ்வதி, என்னை வற்புறுத்தாத என்று சொல்லிட்டு போகின்றார்.

அப்போது வசு வந்து மாமாவுக்கும் அத்தை கூட திடீர் என்று பேச கூச்சமாக இருக்கும்ல, அவங்க சீக்கிரமாவே பேசிடுவாங்க நீங்க வற்புறுத்தாதீங்க என்று சொல்கின்றார். தொடர்ந்து சரஸ்வதி உள்ளே சென்று நடேசனையும் கோதையையும்  தமிழ் உள்ளே படுத்துக் கொள்ளச் சொன்னதாக சொன்னாரு என்று சொல்ல அவர்கள் இருவரும் உள்ளே துாங்க மற்றவர்கள் வெளியே துாங்குகின்றனர்.


மேலும் கோதை துாக்கம் வராததால் வெளியில் சென்று யோசிச்சுக் கொண்டிருக்கின்றார். என் ஒருத்தனால எல்லோரும் எவ்வளவு கஷ்டப்படுறாங்க.அர்ஜுன் பற்றி தமிழும் சரஸ்வதியும் எவ்வளவோ தடவை சொல்ல வந்தாங்க, நான் தான் அலட்சியப்படுத்திட்டேன் என்று அழுகின்றார். அதற்கு நடேசன் நம்ம பொண்ணே நமக்கு எதிரியாக நிற்கும் போது நாம என்னம்மா பண்ணேலும் நீ கவலைப்படாதம்மா என்று அழும் கோதையை சமாதானப்படுத்துகின்றார்.


பின்னர் விடிந்ததும் எல்லோரும் எழுந்து விட தமிழ் கொஞ்சம் லேட்டாக எழும்ப கோதை சரஸ்வதியை கூப்பிட்டு விட அவர் காபி கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்லி விட்டு செல்கின்றார். தொடர்ந்து கார்த்திக் வேறொரு கம்பனியில் வேலைக்கு சேருவதைப் பற்றி வசுவிடம் பேசிட்டு இருக்கிறார். அத்தோடு சரஸ்வதி வீட்டுக்கு நிறைய திங்ஸ் வாங்கனும் என்று தமிழிடம் சொல்கின்றார். இதனால் தமிழ் நமச்சியிடம் வா வெளில போய்ட்டு வருவோம். கம்பெனிக்கு லேட்டாக போவோம் கொஞ்சம் பொருட்கள் வாங்க வேண்டி இருக்கு என்று சொல்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement