• May 13 2024

சீனியர்களுடன் சேர்ந்து பட்டைய கிளப்பும் குட்டீஸ்.. எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட நடுவர்கள் – சரிகமப-ல் இந்த வார ஸ்பெஷல் இது தான்..!

Jo / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி சரிகமப. ரசிகர்கள் மத்தியில் டாப் சிங்கிங் ஷோவாக வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சியின் குழந்தைகளுக்கான சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

அர்ச்சனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஸ்ரீனிவாஸ், விஜய் பிரகாஷ், அபிராமி, சைந்தவி ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர். கடந்த வாரம் விஜய் பிரகாஷ் ஆப்சென்ட்டான நிலையில் சிறப்பு நடுவராக கார்த்திக் வருகை தந்திருந்தார். சீமான் மற்றும் புஷ்பவனம் குப்புசாமி ஆகியோர் தலைமையில் மண் வாசனை சுற்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இந்த சீனியர் ஜூனியர் ரவுண்ட் நடைபெற உள்ளது. அதாவது சரிகமப சீனியர்கள் ஜூனியர்களுடன் சேர்ந்து பாட்டு பாடி ஆரவாரம் செய்ய உள்ளனர். விஜய் பிரகாஷ்க்கு பதிலாக சிறப்பு நடுவராக ஹரி சரண் வருகை தந்துள்ளார்.

ஜீவன் கில்மிஷாவுடன் இணைந்து குருத்த சிரித்தவளே என்ற பாடலை பாடியுள்ளார். அடுத்து விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோர் இணைந்து காத்தடிக்குது காத்தடிக்குது என்ற பாடலை பாடி பட்டய கிளப்ப நடுவர் ஸ்ரீனிவாஸ் தனது கோர்ட்டை கழட்டி எறிந்து ஆட்டம் போட்டுள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனால் சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் செம சம்பவமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement

Advertisement