• Apr 02 2025

முதன்முறையாக கோபியின் சுயரூபத்தை உடைத்து பேசிய இனியா? பாக்கியா வைத்த செக்

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி இனியாவை கடற்கரைக்கு கூட்டிச்செல்ல, அங்கு இனியா அவருடன் மனம் விட்டு பேசுகின்றார். அதாவது எதற்காக அம்மாவை இப்படி கஷ்டப்படுத்துறீங்க? நீங்க வீட்ல இருந்த மட்டும் நல்லா இருந்தீங்க ஆனா இப்ப எவ்வளவு மாறிட்டீங்க..

அம்மா எங்களுக்காக ஓடி ஓடி உழைச்சு கொண்டு இருக்காங்க.. அவங்க அவங்க வழியில போறாங்க.. ஆனா நீங்க அம்மாவை நிம்மதியா இருக்க விடுறீங்க இல்ல.. நீங்க வீட்டை விட்டு போன பிறகு நான் எத்தனை நாள் அழுது இருப்பேன் தெரியுமா? நான் செழியன், எழில் எல்லாம் எவ்வளவு வருத்தப்பட்டு இருக்கம் தெரியுமா?

d_i_a

அம்மாவோட ரெஸ்டாரண்ட்ல எதுக்கு பழைய கறியை கலந்தீங்க? எழில்ட படப் பிடிப்பு பூஜையில் எதற்காக அம்மாவை வரவிடாமல் தடுத்தீங்க என்று கோபியை பேச விடாமல் விளாசி தள்ளுகின்றார் இனியா. முதன்முறையாக அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணி கோபிக்கு எதிராக பேசுகின்றார்.


இதனால் கோபி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இனியாவை சமாதானம் செய்ய பார்க்கின்றார். இனியா எனக்கு நீங்களும் வேண்டும் அம்மாவும் வேண்டும் என்று சொல்லுகின்றார்.

அந்த நேரத்தில் பாக்யா கால் பண்ண கோபி ஃபோனை வாங்கி இனியா விளையாடிக் கொண்டிருப்பதாக சொல்லுகின்றார். அதன் பின்பு பாக்யா வீட்டில் ஈஸ்வரி கோபி மீது கொடுத்த கம்ப்ளைன்டை வாபஸ் வாங்குமாறு சொல்லுகின்றார். 

ஆனாலும் தன்னால் முடியாது. தான் இப்போது வாபஸ் வாங்கினால் தப்பை நானே ஒத்துக் கொண்டது போல என்று பாக்யா ஈஸ்வரிக்கு பதில் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement