• Jul 08 2024

தங்க செருப்பு, வைரத்தில் சேலை, 200 கோடி சொத்து.. வேறென்ன வேண்டும் வரலட்சுமிக்கு?

Aathira / 2 days ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமிக்கும் அவர் காதலித்த நிக்கோலாய் சத்தேவ் என்பவருக்கும் கடந்த இரண்டாம் திகதி கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இவர்களுடைய திருமணம் தாய்லாந்திலும், ரிசெப்ஷன் சென்னையிலும் நடைபெற்றுள்ளது.

நிக்கோலாய் பெரிய தொழிலதிபராக காணப்பட்ட போதிலும் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 16 வயதில் மகள் ஒருவரும் உள்ளார். எனினும் முதலாவது மனைவியை சட்டபூர்வமாக பிரிந்ததை தொடர்ந்து வரலட்சுமியை காதலித்து தற்போது திருமணம் செய்துள்ளார்.

வரலட்சுமியின் திருமணம் தாய்லாந்தில் நடந்ததாகவும், இன்னும் ஒரு சிலர் சென்னை தாஜ் ஹோட்டலில் தான் நடந்தது என்றும் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருகின்றனர். இவ்வாறு தாய்லாந்தில் இவர்களுடைய திருமணம் நடந்திருந்தால் இந்தியாவில் சட்ட சிக்கல் ஏற்படும் எனவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், நடிகை வரலட்சுமியின் திருமணம் தொடர்பில் பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சில விஷயங்களை கூறியுள்ளார்.


அதன்படி அவர் கூறுகையில், வரலட்சுமியின் திருமணத்தில் அவருடைய தாய் சாயாதேவி கலந்து கொள்ளவில்லை. தாய்லாந்தில் ஒரு சொகுசு கப்பலில் தான் நிக்கோலாய் வரலட்சுமிக்கு தாலி கட்டினார். ஆனால் அங்கு திருமணம் செய்தால் இந்தியாவில் செல்லாது என்பதால் சென்னை தாஜ் ஹோட்டலிலும் திருமணம் நடந்தது. சென்னையில் நடந்த நிகழ்ச்சிக்கு ரஜினிகாந்த் தனது மனைவியோடு வந்தார். எப்போதும் அமைதியாக இருப்பவர் வரலட்சுமி கேட்டதால் திருமண விழாவில் குத்தாட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது.

அது மட்டும் இன்றி தனது காதல் மனைவி வரலட்சுமிக்கு தங்கத்தில் செருப்பு கொடுத்து அசத்தியுள்ளார் நிக்கோலாய். அதே போல வைரத்தில் சேலையும், முக்கியமாக 200 கோடி ரூபாய் சொத்தை வரலட்சுமி பெயரில் எழுதி வைத்துள்ளார். இதற்கு மேல் என்ன வேண்டும் வரலட்சுமிக்கு? அவர் சொத்துக்காக மட்டும் தான் நிக்கோலாவை திருமணம் செய்திருக்கின்றார் என்று கூறியுள்ளார் பயில்வான்.


Advertisement

Advertisement