• May 05 2024

இதை போய் மணிரத்னம் சேரிடம் கேளுங்கள் எனக்கும் இதுக்கும் சம்மந்தமில்லை- கடுப்பான சரத்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாகக வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாகி பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வந்தாலும் மறுபுறம் நெக்கடிவ் விமர்சனங்களையே பெற்று வருகின்றது. அத்தோடு இப்படத்தில் சோழ மன்னன் இந்து மத மன்னனாக காண்பிக்கப்பட்டதாக வெற்றிமாறன் பேசியிருந்தார்.

இவரின் இந்த கருத்துக்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்திருந்ததோடு கருணாஸ் ஆதரவாகப் பேசியிருந்தார். இந்த நிலையில் பிரபல பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து சரத்குமாரிடம் கேட்கப்பட்டது. அப்போது பதில் கூறிய சரத்குமார்  ''பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த கேரக்டருக்கு சரத்குமார் தான் பொருந்துவார் என்கிற எண்ணம் மணிரத்னத்திற்கு உதித்தது மிகப்பெரிய விஷயம். வாய்ப்பளித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தைப் பார்த்து பலரும் எனக்கு போன் செய்தார்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளதை நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவர் மத்தியிலும் சென்றடைந்திருக்கிறது'' என்றார்.


மேலும், ''குறை சொல்பவர்கள், அந்தக் குறையை இயக்குநரிடம் சென்று இப்படி சித்தரித்து இருக்கிறீர்களே என்று கேட்க வேண்டும். தவறு இருக்கிறது என்றால் இயக்குநரிடம் சொல்ல வேண்டும். வெற்றிமாறன் கருத்து பதிவு செய்திருக்கிறார். இது சுதந்திர நாடு. யார் என்ன கருத்து சொல்ல விரும்புகிறார்களோ சொல்ல உரிமை இருக்கிறது. இது ஜனநாயக நாடு. அவர் கருத்து சொல்லி இருக்கிறார் என்றால் அதை யாரிடம் கேட்க வேண்டுமோ அவரிடம் போய் கேட்க வேண்டும்.


என்னைப் பார்த்து அந்த கருத்தை கேட்டால் நான் சொல்லும் கருத்து ஏற்றுக்கொள்ளப்படுமா? படத்தில் நடித்ததினால் என்னிடம் கேட்க வேண்டுமா? இயக்குநரிடம் சென்று கேளுங்கள். இப்படி சித்தரிக்கப்பட்டது தவறு என்று நினைக்கிறோம். இப்படி படத்தில் சொல்லி இருக்கிறீர்கள் என்று நீங்கள் ஜெயமோகனிடம் கேளுங்கள். பிறகு நான் பதில் சொல்கிறேன்'' என தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement