• May 05 2024

துணியில்லாமல் சிரமப்படுபவருக்கு துணி கொடுத்து உதவுங்கள்- ரன்வீர் சிங்கிற்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய மக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் ரன்வீர் சிங். இவர் பிரபல நடிகையான தீபிகா படுகோனின் கணவன் என்பதும் யாவரும் அறிந்ததே.நடிப்பைத் தாண்டி மாடலிங் துறையிலும் ஆர்வம் காட்டி வருகின்றார்.

இதனால் விதம் விதமான போட்டோ ஷுட் எடுத்து அதனைப் பதிவிட்டு வருவார். அந்தவகையில் கடந்த சில மாதங்களுக்கு முதல் பெண்களை போன்ற உடைகளை அணிந்து ரன்விர் சிங் நடத்திய போட்டோஷூட் பல ஆட்சேபணைகளை ஏற்படுத்தியது.

தற்போது துணியே இல்லாமல் கொடுத்த போட்டோஷூட் போஸ் காரணமாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளார் ரன்வீர் சிங். அவரது நிர்வாண புகைப்படம் குறித்து பலரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் ரன்வீர் சிங்கிற்கு எதிராக மத்திய பிரதேசம் இந்தூரில் நூதனமான போராட்டத்தை சிலர் நடத்தியுள்ளனர்.

துணியில்லாமல் சிரமப்படும் ரன்வீர் சிங்கிற்காக துணி கொடுத்து உதவுமாறு பெட்டி ஒன்றை செய்து அதில் துணிகளை சேகரித்து போராட்டம் நடத்தியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement