• May 08 2024

அம்மாவை விட்டிட்டு சித்தியைக் கல்யாணம் பண்ணினார்... கார்த்திக்கின் பிரிவு குறித்து முதன் முறையாக மனம் திறந்த கவுதம் கார்த்திக்..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தான் நடிகர் கார்த்திக். இதனையடுத்துப் பல படங்களிலும் நடித்து முன்னணி ஹீரோவாக உயர்ந்து மக்கள் மனதில் இடம்பிடித்தார். 


இவர் 1998-ஆம் ஆண்டு தான் காதலித்து வந்த நடிகை ராகினியை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள். அதில் மூத்த மகனான கவுதம் கார்த்திக் தற்போது சினிமாவில் ஹீரோவாக பல படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றார். மேலும் கடந்த ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனைக் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.


இந்நிலையில் சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் கவுதம் கார்த்திக் தன்னுடைய அம்மாவும், அப்பாவும் பிரிந்தமை குறித்து மனம் திறந்து மனம்திறந்து பல விடயங்களைக் கூறி இருக்கின்றார். அதாவது அவர் கூறுகையில், அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணியதால் தான் அம்மா அவங்கள விட்டு பிரிஞ்சிட்டாங்க" என்றார்.

மேலும் "எனது அம்மா, அப்பா இருவருமே பிரிந்த பிறகு யாருமே இல்லாமையினால் நான் தான் தனிமையில் மிகவும் வாடினேன். பிறகு அப்பா சென்னையில் இருந்த காரணத்தினால் நான் அம்மாவுடன் இருந்தேன். பின்பு வருஷத்துக்கு ரெண்டு தடவ மட்டும் தான் அப்பா எனக்கு போன் பண்ணுவார். அதுமட்டுமல்லாது எப்போதாவது இருந்திட்டு தான் எங்களை பார்க்கவே வருவார்" என்றார்.


அத்தோடு "எங்க அம்மா தான் என்னையும் என் தம்பியையும் எந்தக் குறையும் இல்லாமல் மிகவும் அழகாக பார்த்து கொண்டார்" எனவும் தெரிவித்துள்ளார் கவுதம் கார்த்திக்.

Advertisement

Advertisement

Advertisement