• May 07 2024

முக்கிய அரசியல் கட்சியில் குதிக்கத் திட்டமிட்ட த்ரிஷா... கவலையில் ரசிகர்கள்.. எதனால் தெரியுமா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை முன்னணி பெண் நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவரின் வயது 40-ஐ நெருங்கினாலும் இளமை குறையாமல் அதே அழகுடன் 20 வயதில் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்து வருகின்றார். இவர் தனது நடிப்பின் திறமையினால் பல்லாயிரக்கணக்கான ரசிகர் பட்டாளத்தை தனக்கென உருவாக்கி வைத்திருக்கின்றார்.


இந்நிலையில் இவர் தற்போது 'பொன்னியின் செல்வன்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குந்தவையாக நடித்துள்ளார். இப்படமானது வருகிற செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.



அதுமட்டுமன்றி பல மொழிப் படங்களையும் கைவசம் வைத்திருக்கின்றார். அதாவது தமிழில் 'ராங்கி, கர்ஜனை, சதுரங்க வேட்டை' போன்ற படங்களும், மலையாளத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக 'ராம்' எனும் படமும், தெலுங்கில் 'பிருந்தா' என்கிற வெப்தொடர் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்.


அத்தோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'தளபதி 67' படத்திலும் நடிகர் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்நிலையில் இவரின் நெருங்கிய தோழியான நயன்தாரா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டதையடுத்து விரைவில் த்ரிஷாவும் திருமணம் செய்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

 



எனினும் அவர் தற்போது அனைவருக்கும் அதிர்ச்சியை தரும் வகையில் மற்றுமோர் முடிவினை எடுத்திருக்கின்றார். அவரது புதிய முடிவு பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. அதாவது விரைவில் அரசியலில் என்ட்ரி கொடுக்க திட்டமிட்டு உள்ளாராம். அதுவும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தான் தன்னுடைய அரசியல் பணியை தொடங்க இருக்கிறாராம்.


மேலும் இவர் ஜெயலலிதா போல் அரசியலில் ஒரு ரவுண்டு வர வேண்டும் என்ற ஆசையுடன் தான் தற்போது அரசியலில் களமிறங்க திட்டமிட்டுள்ளாராம். விரைவில் அவரது அரசியல் என்ட்ரி குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  



எனினும் இவரின் இந்த முடிவு ரசிகர்கள் பலருக்கும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது. ஏனெனில் ஒருவேளை இவர் அரசியலுக்கு சென்றுவிட்டால் சினிமாவில் தொடர்ந்து நடிப்பாரா அல்லது நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவாரா என்ற சந்தேகம் இவர்களுக்குள் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. மீண்டும் த்ரிஷா நடிப்பதையே தாம் விரும்புவதாகவும் கூறி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement