• Sep 01 2025

"வாழை" நடிகை செய்த தியாகம்... இவ்வளோ கஷ்ட்டப்பட்டு படம் நடிக்கணுமா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குனர் மாரிசெல்வராஜின் வாழை திரைப்படம் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தவர் மாரி செல்வராஜ்.


இவருடைய சிறு வயதில் ஏற்பட்ட உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு தான் வாழை படம் உருவாகியுள்ளது. முதல் நாளில் இருந்த விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வாழை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த திரைப்படத்தில் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை திவ்யா துரைசாமி.


தனது எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை தற்போது தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ளார். இந்நிலையில் வாழை திரைப்படத்தின் ஷூட்டிங் நேரத்தில் எடுக்கப்பட்ட விடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் திவ்யா துரைசாமி அவர்கள் வாழை திரைப்பட ஷூட்டிங் நேரத்தில் கழுத்தில் சுளுக்கு விழுந்து கழுத்து வழியால் அவதிப்படும் நிலையில் ஒரு பாட்டி அவருக்கு உதவி செய்கிறார். அதில் வலியால் அவர் கத்தி கொண்டிரும் போது. அந்த பாட்டி கழுத்தை தடவி சுளுக்கெடுக்கும் வீடியோ தான் வைரலாகியுள்ளது. 

 

Advertisement

Advertisement