தெலுங்கு சினிமா மூலம் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ஸ்ரீலீலா, தற்போது தனது அழகு, திறமை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய சமூக ஊடகப் பதிவுகள் மூலம் மீண்டும் ஒருமுறை மக்கள் கவனத்தைத் திருப்பியுள்ளார். 23 வயதான இவருக்கு தற்போது தமிழ் திரையுலகிலும் தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவாகி வருகின்றது.
2025ல் வெளிவர உள்ள சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகும் ஸ்ரீலீலா, தற்போது மணப்பெண் அலங்காரத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஸ்ரீலீலா, அதிகளவான வெற்றிப் படங்களில் நடித்து, தெலுங்கு ரசிகர்களின் மனதில் ஆழமான இடத்தைப் பிடித்திருந்தார். தற்போது, தமிழகத்தின் பிரபல ஹீரோ சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் இணைந்து நடித்திருப்பது ரசிகர்களுக்கு படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கவைத்துள்ளது.
இளம் வயதிலேயே சினிமா வெற்றியை ரசித்த ஸ்ரீலீலா, தனது வாழ்வில் ஒரு முக்கியமான பகுதியை சமூக சேவைக்கு ஒதுக்கியுள்ளார். குறிப்பாக, தனது வீட்டில் தத்தெடுத்து சில குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உருவாக்கும் வகையில் தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட புகைப்படங்களில், ஸ்ரீலீலா மணப்பெண் அலங்காரத்தில் காட்சியளித்திருந்தார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
பலரும், “இது உண்மையிலேயே திருமண அறிவிப்பா?” எனக் கேள்விகளை எழுப்பியுள்ளனர். இவ்வாறு வதந்திகள் வேகமாக பரவிக் கொண்டிருந்த நிலையில், ஸ்ரீலீலா நேரடியாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்தார். அதன்போது, “இந்த புகைப்படங்கள் என் பிறந்தநாளுக்கான குடும்ப கொண்டாட்டத்தின் ஒரு பகுதிதான். ஹல்தி ceremony மாதிரி. என் அம்மா இதை ஒழுங்குபடுத்தினார். அது தவிர வேறெதுவும் இல்லை!” என்றார்.
இப்போது 23 வயதாக உள்ள ஸ்ரீலீலா, வருகின்ற ஜூன் 14ம் திகதி தனது 24வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதற்கான ஆரம்ப கொண்டாட்டமாகவே அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தது என உறுதி செய்யப்பட்டுள்ளது.
Listen News!