• May 18 2024

பிரபல நடிகைக்கு வீடு தேடி வந்த கொலை மிரட்டல்…பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தாலும், பலர் தாங்கள் உண்டு தங்களின் வேலையுண்டு என்றே இருப்பார்கள். இதையும் தாண்டி சில திரையுலக பிரபலங்கள் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து மாட்டி கொள்வதும் உண்டு என்றுஎ தான் கூற வேண்டும்.

அந்த வகையில் பாலிவுட் நடிகை ஸ்வரா பாஸ்கர் எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் தயங்காது தனது கருத்தை கூறிவிடுவார். சில நேரங்களில் அவர் தெரிவிக்கும் அதிரடியான கருத்துக்களால் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு, ஒரு கருத்து சொன்னார். அதாவது தலிபான் தீவிரவாதிகளுடன், இந்துத்துவாவை ஒப்பிட்டு ஒரு பேட்டி தந்திருந்தார்.

"தீவிரவாதிகளின் அட்டகாசம் ஆப்கானிஸ்தானில் பொறுத்துக்கொள்ள முடியாத அளவில் இருப்பதுபோலத்தான், இங்கேயும் இந்தியாவில் இந்துத்துவ தீவிரவாதமும் சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது"என்று குறிப்பிட்டிருந்தார் ஸ்வரா பாஸ்கர்.

மேலும் இவரின் இந்த கருத்தை கேட்டு கொந்தளித்துள்ள இந்துத்துவாவினர்ஸ்வரா பாஸ்கரை கைது செய்யவேண்டும் என்று ஆவேசமாக கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் ஸ்வர பாஸ்கர் திடீரென மும்பை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். தனக்கு கொலை மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார்.

ஹிந்தியில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தில் வீர் சாவர்க்கரை இழிவுபடுத்துவதை நாட்டில் இளைஞர்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது, ஆனால் இந்த கடிதத்தை அனுப்பியது யார் என்ற விவரம் தெரியவில்லை, மேலும் அடையாளம் தெரியாத நபர்களால் அந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடிகைக்கு கடிதம் மூலமாக கொலை மிரட்டல் வந்துள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement