• May 18 2024

மீனாவுக்கு அவரின் கணவர் கொடுத்த முதல் பரிசு இதுதானாம்..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகில் கண்ணழகி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்ற மீனா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், பிரபு, அஜித், பிரபுதேவா, பார்த்தீபன் உள்ளிட்ட பலருடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறாகப் பல வெற்றிப் படங்களில் தொடர்ந்தும் பிஸியாக நடித்து வந்த நடிகை மீனா 2009-ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரைத் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகினார்.

இவர்களுக்கு தற்போது நைனிகா என்ற அழகான மகள் ஒருவரும் உண்டு. இவரும் தனது தாயைப் போலவே சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாகக் கலக்கி வருகின்றார்.

இந்நிலையில் சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர்கடந்த 28ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதற்கு திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இவ்வாறு இருக்கையில் மீனாவின கணவர் பற்றிய சில நினைவுகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகி்ன்றது.

அந்த வகையில் நடிகை மீனாவை முதல் முறையாக வித்யாசாகர் பார்க்க வந்த போது கொடுத்த பரிசு குறித்த தகவல் கசிந்துள்ளது.

முன்னதாக சிம்ப்ளி குஷ்பு நிகழ்ச்சியில் கலந்து மீனா கொண்ட போது பேசிய விடயங்களே வைரலாகி வருகின்றது. அந்த நிகழ்ச்சியில் குஷ்பு, அப்பா, அம்மா பார்த்த பையனை தான் கட்டிக்கிட்டீங்க. ஆனால் அவரை பார்த்ததுமே முதலில் வேண்டாமென்று சொல்லிவிட்டு, அதன் பிறகு ஓகே பண்ணீங்க. அது என்ன கதை என்று கேட்டார்.

அதற்கு மீனா கூறியதாவது,

ஆமாம், அப்படித் தான் நடந்தது. ஜாதகம் பார்த்தவர் இதை விட நல்லது அமையுமே என்றார். உடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். பிறகு என் ஆன்ட்டி பேசி தான் எல்லாம் நடந்தது.

ஆபீஸ் விஷயமாக சீனாவுக்கு சென்றிருந்தார் வித்யாசாகர். அங்கிருந்து நேராக சென்னை வந்து என்னை முதல்முறையாக சந்தித்தார். ஒரு பையுடன் வந்தார். அந்த பை முழுக்க சாக்லேட் இருந்தது.

மேலும் எனக்கு சாக்லேட் பிடிக்கும் என்று தெரிந்து பெரிய பை நிறைய வாங்கி வந்தார். அது என்னை கவர்ந்தது. எனக்காக இவ்வளவு செய்தாரே என்று தோன்றியது என்றார்.

Advertisement

Advertisement