• May 12 2024

கோபியை திருமணம் செய்ய சொல்லும் குடும்பம்.. ராதிகா எடுத்த முடிவு – இன்றைய முழு எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்....

கோபி பாக்யாவுக்கு போன் பண்ணி கண்ட மணிக்கு பேசிய நிலையில் கடுப்பாகி  பாக்யா போனை கட் செய்து விடுகிறார். செல்வி மற்றும் ஜெனி யார் என கேட்க தேவையில்லாத போன் கால் ஆனா இந்த மாதிரியான போன் கால் தான் நம்புவதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவும் என கூறுகிறார். 



அத்தோடு குடும்பத்தை சமாளிக்க இப்போ பண்ணிட்டு இருக்கிற  இந்த மசாலா பிசினஸ் கேட்டரிங் ஆர்டர் பத்தாது இன்னும் பெருசா ஏதாவது செய்ய வேண்டும் யோசிக்க வேண்டும் என பாக்யா சொல்கிறார்.

இன்னும் பெருசா என்ன பண்ண முடியும் நம்மளால சமாளிக்க முடியுமா என கூற பாக்கியா முடியும் என்று நினைத்தால் முடியும் என்று உறுதியாக சொல்ல ஜெனி அவரை பாராட்டுகிறார். அடுத்ததாக வீட்டில் உள்ளவர்கள் வந்து இனியாவுக்கு ஸ்கூல் பீஸ் கட்டிட்டியா என கேட்க பாக்யா அமைதியாக இருக்க அப்போது வந்த இனியா அப்பா ஸ்கூல் பீஸ் கட்டின விஷயத்தை கூற ஈஸ்வரி கோபி பெருமையாக பேசுகிறார்.



மேலும் இந்த பக்கம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்து ராதிகா கோபியை சந்தித்த விஷயத்தை சொல்ல அவருடைய பரிதாபமான நிலையை பற்றி சொல்ல அவரது குடும்பத்தார் உடனே கோபியை கல்யாணம் பண்ணிக்கிட்டு அவருக்கு ஆதரவாக இரு என கூறுகின்றனர். ஆனால் ராதிகா எனக்கு இப்ப கோபி மேல இருக்கறது வெறும் பரிதாபம் தான் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.



Advertisement

Advertisement

Advertisement