• May 07 2024

வெளிச்சத்திற்கு வந்த தேவி பற்றிய உண்மைகள்- குத்து விளக்கை எடுத்து தன்னைத் தானே குத்த முயன்ற ரம்யா- பார்த்திபன் எடுத்த முடிவு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் விறுவிறுப்பின் உச்ச கட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கல்யாணத்திற்கு வந்த அனைரும் ரம்யா கழுத்தில் பார்த்தி தாலி கட்டியே ஆகனும் என்று கூற ஜீவாவும் ப்ரியாவும் அனைவரையும் சமாளிக்க முற்படும் வேளையில் காவியா மயங்கி விழுந்து விடுகின்றார். பின்னர் அங்கிருந்த அனைவரும் காவியாவையும் பார்த்தியையும் பிரித்து பார்த்தியை மேடைக்கு  இழுத்துச் செல்கின்றனர்.


இந்த நேரத்தில் பார்த்தியின் அம்மா பார்வதி தலையில் பலத்த காயத்துடன் வந்து தேவி தனக்கு செய்த விடயத்தை எல்லாம் கூறுகின்றார். இதனால் அருணாச்சலத்துடன் சேர்ந்து அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இருப்பினும் இதுக்கு ஏதும் ஆதாரம் இருக்கா சும்மா என்மீது பழி எல்லாம் போடாதீங்க என்று தேவி சொல்கின்றார்.

இதன் பின்னர் ஜேகே வந்து தேவி செய்தவற்றை எல்லாம் சொல்லவும் தேவி ஜேகே ரம்யாவை காதலிக்கிறான் அதை இப்படிக் கட்டுக்கதை சொல்லுகிறான் என்று சொல்ல அருணாச்சலம் கோபமடைந்து தேவியைத் திட்டுகின்றார். அத்தோடு பார்வதி பார்த்திக்கு காவியாவைத் தான் பிடிச்சிருக்கு காவியாவோட தான் அவன் வாழ்வான் என்று சொல்கின்றார்.


இருப்பினும் ரம்யா அருணாச்சலத்தின் காலில் விழுந்து பார்த்தியை தனக்கு கல்யாணம் பண்ணித்தரும்படி கூறுகின்றார். அவர் மறுத்து விட பார்த்தியின் கையைப் பிடித்து தன்னைக் கல்யாணம் பண்ணச் சொல்லி கெஞ்சுகின்றார். ஆனால் பார்த்தி மறுத்து விட ஓடிப்போய் மேடையின் மேலிருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து எறிகின்றார். அத்தோடு குத்துவிளக்கை எடுத்து தன்னை குத்தி கொலை செய்ய பார்க்கிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement