தமிழ் திரையுலகில் விரும்பப்படும் தம்பதிகளில் ஒருவராக கருதப்படும் அஜித்குமார்- ஷாலினி ஜோடியின் புதிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் மத்தியில் “ரோல் மாடல் தம்பதி” என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த ஜோடி, மீண்டும் தங்களின் அன்பால் கவனத்தை ஈர்த்துள்ளனர்.
அதாவது, நடிகர் அஜித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் மனைவி ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட சில அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மதிய உணவின் போது எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படங்களில், இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக காணப்படுகின்றனர். குறிப்பாக, ஒருவருக்கொருவர் அன்புடன் முத்தமிட்டு பாசத்தை வெளிப்படுத்தும் தருணங்கள் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளன.

திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்னரும் அஜித் - ஷாலினி தம்பதியினர் தங்களின் உறவை அதே அன்புடனும் புரிதலுடனும் தொடர்ந்துவருவது ரசிகர்களால் பாராட்டப்படுகிறது. இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும் கமெண்ட்ஸ்களையும் பெற்றுள்ளன.
தற்போது இந்த புகைப்படங்கள் பல்வேறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. அஜித் - ஷாலினி ஜோடியின் இந்த அன்பான தருணங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!