• May 10 2024

போட்டுக் கொடுத்த கரிகாலன்... குணசேகரனிடம் வசமாக சிக்கிய நந்தினி... பரபரப்பான 'Ethirneechal' Episode..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல ஹிட் சீரியல் தான் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது நாளுக்கு நாள் விறுவிறுப்பான கதைக்களத்தைக் கொண்டு அதிரடித் திருப்பத்துடன் நகர்ந்த வண்ணம் இருக்கின்றது. இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் என்ன நிகழ்ந்துள்ளது என்பதை பார்ப்போம்.

அந்தவகையில் முதியோர் இல்லத்திற்கு கொடுப்பதற்காக நந்தினி சமையல் செய்து வைத்ததை வண்டியில் ஏற்ற தயாராகிறார்கள். அந்த சமயத்தில் நந்தினி நான் ஒரு முறை ஹாலில் யாராவது இருக்கிறார்களா என பார்த்துவிட்டு வருகிறேன் என கூறிவிட்டுப் போய் பார்க்கின்றார். அப்போது கரிகாலன் மாடியில் இருந்து இறங்கி வந்துகொண்டு இருக்கிறான். 

அந்த சமயத்தில் விசாலாட்சியும் வருகின்றார். அவரிடம் வந்த கரிகாலன் "கிச்சனுக்கா போறீங்க? பரண்  மேல இருந்து அண்டா குண்டா எல்லாம் எடுத்து வைச்சு இருக்காங்க. ஆனா தூசியே இல்லாம வாசனையா இருக்கு என சொல்லி விசாலாட்சியிடம் போட்டுக் கொடுக்கின்றார். என்னடா உளற நான் போய் பார்த்துட்டு வருகிறேன்" எனக் கூறிவிட்டு விசாலாட்சி செல்கின்றார்.

 

கிச்சனுக்கு சென்ற விசாலாட்சி அங்கு பெரிய பாத்திரங்களில் உணவு வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சியாகி "என்னடி பண்ணறீங்க?" என கேட்கிறார். அதற்கு நந்தினி பயத்துடன் தான் தொழில் தொடங்கியுள்ளதை பற்றி சொல்கின்றார். இதைக் கேட்டதும் விசாலாட்சி ஷாக் ஆகின்றார். 

பதிலுக்கு நந்தினி "நீங்க தான் அத்தை எங்களுக்கு சப்போர்ட்டா இருக்கணும். அப்படியே நாங்க அத புடிச்சுக்கிட்டு மேலே வந்துருவோம். ஜனனிக்கும் சக்திக்கும் சப்போர்ட் பண்ணற மாதிரி எங்களுக்கு பண்ணுங்க அத்தை" என்கிறார். அதற்கு விசாலாட்சி "அவங்க எல்லாருக்கும் முன்னாடி சொல்லி செய்றாங்க உன்ன மாதிரி திருட்டுத்தனம் செய்யல" என்கிறார்.

பின்னர் நந்தினி "ப்ளீஸ் அத்தை அந்த கரிகாலனை கொஞ்சம் அந்த பக்கம் கூட்டிட்டுப்போனா, நாங்க இப்படியே இதை எடுத்துட்டு போயிடுவோம்" என்கிறார். அதற்கு விசாலாட்சி "இந்த விஷயம் மட்டும் பெரியவனுக்கும் உன்னோட புருஷனுக்கும் தெரிஞ்சுது அவ்வளவுதான். என்னால முடியாது" என சொல்லி வெளியே சென்று கரிகாலனை ஹனிமூன் பத்தி பேசலாம் வா என மாடிக்கு அழைத்து செல்கின்றார்.


இதனையடுத்து நந்தினி, ஜனனி, சக்தி வண்டியில் பாத்திரங்களை ஏத்துகிறார்கள். அந்த சமயத்தில் குணசேகரன், கதிர் மற்றும் ஞானம் காரில் வந்து இறங்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பின்னர் குணசேகரன் "என்ன இதயெல்லாம்? எங்க சமைத்து சோறு எடுத்துட்டு போறீங்க? " என மிரட்டுகின்றார். 


பதிலுக்கு நந்தினி "கோயிலுக்கு அன்னதானம் செய்ய எடுத்துட்டு போறோம். அத்தைதான் காட்டு கோயிலுக்கு வேண்டி இருந்தாங்களாம். அவங்க தான் குடுத்துட்டு வர சொன்னாங்க" என சமாளிக்கின்றார் நந்தினி. அதற்கு குணசேகரன் "பொய் சொல்லாத நந்தினி. உன்னோட கண்ணுல உண்மையில்ல" என்கிறார். பதிலுக்கு நந்தினி "ஐயோ மாமா அன்னதானத்துக்கு லேட் ஆகுது" என சொல்ல "போய் தொலைங்க" என அனுப்பி விடுகிறார் குணசேகரன். 

பின்னர் வீட்டிற்குள் சென்ற குணசேகரன் விசாலாட்சியிடம் இதை பற்றி கேட்க சொல்கிறார். பின்னர் கதிர் விசாலாட்சியிடம் "கோயிலுக்கு வேண்டுதல் செய்ய சொன்னியா?" என கேட்கின்றார். அதற்கு அவர் ஒண்ணுமே புரியாமல் முழிக்கிறார். உடனே ரேணுகாவும் ஈஸ்வரியும் வெளியில் நின்று கொண்டே மாமியாருக்கு சைகை மூலம் "ஆமாம்" என சொல்லுங்கள் என சொல்கிறார்கள். 

இதனையடுத்து "ஆமா நான் தான் போக சொன்னேன். ஒரே ஞாபக மறதியா இருக்கு" எனக்கோரி அங்கிருந்து நழுவி விடுகின்றார். இவ்வாறாக இந்த எபிசோட் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement