• Apr 27 2024

அன்றும் இன்றும் ஆஜராகாத சீமான்... போலீஸ் எடுக்கப்போகும் அடுத்தகட்ட நடவடிக்கை...!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 'ப்ரண்ட்ஸ்' திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு தங்கைச்சியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி.


சினிமாவில் இவர் பிரபல நடிகையாக இருந்தாலும் இவரின் நிஜ வாழ்க்கை சர்ச்சை நிறைந்ததாகவே உள்ளது. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர், "சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டார்” என்று கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டுத் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். 


இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சீமான் தன்னை 7தடவை கட்டாயக் கருக்கலைப்பு செய்ததாக கூறி அவரைக் கைது செய்யுமாறு புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 66பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸ் சீமானை நேரில் ஆஜராகுமாறு கூறி சம்மன் அனுப்பியிருந்தனர்.


ஆனால் அன்றைய சீமான் ஆஜராகாத சீமான் இன்றைய தினம் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகவுள்ளதாக சீமான் தரப்புக் கூறியிருந்தனர். இந்நிலையில் தற்போது மற்றுமோர் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது சீமான் இன்றைய தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வில்லை எனக் கூறப்படுகின்றது. அவருக்குப் பதிலாக அவரது வழக்கறிஞரே காவல் நிலையம் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து போலீசார் என்ன முடிவு எடுக்கவுள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement