விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகிக் கொண்ட இருக்கின்றது. அந்த வகையில் 19ம் நாள் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
அதாவது இந்த வாரம் ஆரம்பித்த போது வைக்கப்பட்ட பொம்மை டாஸ்க்கானது தற்பொழுதும் நடபெற்று முடிந்தது. இன்றைய தினம் யாரெல்லாம் சண்டை பிடிப்பார்க்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓரளவு சுமூகமாக அனைவரும் இன்று விளையாடினார்கள். இதனால் ராபேட் மாஸ்டர் ,அமுதவாணன் ,ராம் என மூன்று வின்னர்களை பிக்பாஸ் அறிவித்தார்.இவர்கள் யாரையும் அடுத்த வாரம் நாமினேட் பண்ணக் கூடாது என்று என்றும் கூறினார்.
அசீம் நிறைய பேரை தன்னுடைய கூட்டணியில் அமைத்து விளையாடினாலும் அவரால் இந்த மூன்று இடத்தில் ஒன்றைக் கூட பெற முடியவில்லை என்ற சோகத்தில் இருந்தார். இதனால் அவரது ரீமைச் சேர்ந்தவர்களே அவரிடம் போய் பேசுவதற்குப் பயந்து கொண்டு இருந்தார்கள். குறிப்பாக ஏடிகே, மகேஸ்வரி எல்லாரும் அசீம் குறித்து பேசிட்டு இருந்தாங்க.
பின்பு இன்றைய தினம் வேஸ்ட் பொஃபோமர், பெஸ்ட் பொஃபோமர் என்று அறிவிக்கப்பட்டது.அதில் வேஸ்ட் பொஃபோமராக ஷிவின் தெரியப்பட்டார். பெஃஸ்ட் பொஃபோமராக மணிகண்டன், குயின்சி ,நிஷாசினி ஆகியோர் தேர்வாகி அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கு தகுதியானவர்களாக பிக்பாஸ் அறிவித்தார்
.
பின்னர் இந்த வாரம் முழுக்க ஒழுங்காக வேலை செய்யாதவராக அசீம் அழைக்கப்பட்டார்.பின்னர் அசீம் மற்றும் ஷிவின் ஆகியோர் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர்.அதன் பின்னர் லட்ஜரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. பின்னர் லட்ஜரி பட்ஜெட் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் புள்ளிகளுக்கேற்ற உணவுகளும் வழங்கப்பட்டது. இவ்வாறாக இன்றைய எப்பிஷோட் முடிவடைந்தது எனலாம்.
Listen News!