• May 04 2024

ஜீவானந்தத்தை தப்பாக பேசிய விசாலாட்சியை அடக்கிய ஈஸ்வரி- புதுக்கதை கட்டிய கரிகாலன்- ஷக்தி எடுத்த முடிவு- Ethirneechal - Promo

stella / 5 months ago

Advertisement

Listen News!


சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல்.  இந்த சீரியலில் அடுத்து என்க நடக்கப்போகின்றது என்பதற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் ஜனனி அப்பத்தாவின் எரிந்த புடவையைக் கொண்டு வந்து நந்தினியின் கையில் கொடுத்து விட்டு இவங்க எல்லோரும் அப்பத்தாவை கொன்றுட்டாங்க என்று சொல்கின்றார்.


அப்போது கரிகாலன் வந்து கொஞ்சம் என்றால் நாங்களும் செத்திருப்போம் என்று சொல்ல, ஷக்தி அப்பிடித் தானே ஊரை ஏமாற்றி வைச்சிருக்கிறீங்க, அதை எங்களையும் நம்ப சொல்லுறீங்களா என்று கேட்கின்றார்.

தொடர்ந்து அங்கு வரும் ஈஸ்வரி ஜீவானந்தத்தை அரஸ் பண்ணியாச்சு என்று சொல்கின்றார். இதைக் கேட்ட விசாலாட்சி எதுக்காக அவனுக்காக பேசிட்டு திரியிறீங்க, அப்பிடி என்னடி வசியம் பண்ணினான் அவன் என்று சொல்ல ஈஸ்வரி நிறுத்துங்க அத்தை என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement