• Apr 27 2024

யாரையும் நம்பாதீங்க நடியுங்க- மகாலட்சுமி போட்ட பதிவால் ஷாக்கான ரசிகர்கள்- இதெல்லாம் ஒரு காரணமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்கியவர் தான் விஜே மகாலட்சுமி. இவர் இதனைத் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகின்றார். இதனால் இவரக்கென்று தனிரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் இவர் அன்பே வா என்னும் சீரியலில் நடித்து வருகின்றார்.

இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு மகன் உள்ள நிலையில் அண்மையில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்தர் சந்திரசேகரை திருமணம் செய்தார் ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.


 இதனை தொடர்ந்து இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.திருமணத்திற்கு பிறகும் சீரியல்கள், சினிமா என பிஸியாக இருந்து வருகிறார் மகாலட்சுமி. அதே நேரத்தில் சமூக வலைதளங்களிலும் விளம்பரம் செய்து காசு பார்த்து வருகிறார். சேலைகள், ஸ்னாக்ஸ், அழகு சாதனப் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் என எதையும் விட்டு வைப்பதில்லை மகாலட்சுமி.

தினமும் ஏதாவது ஒன்றை விளம்பரப்படுத்தி கல்லாக்கட்டி வருகிறார். திருமணம் ஆவதற்கு முன்பை விட திருமணத்திற்கு பிறகுதான் மகாலட்சுமிக்கு விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. எப்போதும் எதையாவது விளம்பரப்படுத்துவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.


 தான் விளம்பரம் செய்வதும் ஒரு பக்கம் என்றாலும் அவற்றுக்கு மகாலட்சுமி கொடுத்து வரும் கேப்ஷன்கள் கவனத்தை பெற்று வருகிறது.அந்த வகையில் தற்போது மகாலட்சுமி சேலையை விளம்பரப்படுத்தி சில போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். அவற்றுக்கு மகாலட்சுமி கொடுத்துள்ள கேப்ஷன் ரசிகர்களை ஷாக்காகி இருக்கிறது. 

அதாவது மக்களை நம்புவது போல் நடியுங்கள், ஆனால் நம்பாதீர்கள் என பதிவிட்டுள்ளார். மகாலட்சுமியின் இந்த பதிவை பார்த்த சிலர் சரிதான் என ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் பலர் என்ன மகா ஏமாத்த சொல்றீங்க என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement