• May 06 2024

மாரிமுத்து எதனால் உயிரிழந்தார் தெரியுமா..? அவரின் இறப்பிற்கு இதுதான் காரணம்... அடித்துக்கூறும் பயில்வான்..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. ஆதி குணசேகரனாகவே ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்த இவர் ஒரு திறமையான நடிகர். 

எதிர் நீச்சல் சீரியலின் முழு வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்த சீரியல் நடிக்கும் நடிகர்களின் யதார்த்தமான நடிப்பு என்றால் அது மிகையல்ல. அந்த வகையில் சீரியலை தூக்கி நிறுத்தியதில் முக்கிய பங்கு வகிப்பது ஆதிகுணசேகரன் கதாபாத்திரம்.


சீரியல் மட்டுமன்றி ஒரு சில படங்களில் நடித்தும் இறுக்கின்றார். அதாவது ‘பரியேறும் பெருமாள், கொம்பன், ஜீவா' ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.  அதுமட்டுமல்லாது 'கண்ணும் கண்ணும் மற்றும் புலி வால்' ஆகிய திரைப்படங்களை இயக்கியுமுள்ளார். மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற 'ஜெயிலர்' படத்திலும் நடித்திருந்தார்.


இந்நிலையில் மாரிமுத்து மாரடைப்பினால் திடீரென உயிரிழந்துள்ளமை ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு பலரும் பல விதமான காரணங்களைக் கூறிவருகின்றனர். அந்தவகையில் சினிமா விமர்சகர் பயில்வானும் இதுகுறித்துப் பேசியுள்ளார்.


அதாவது "மாரிமுத்துவுடன் இணைந்து நான் ஒரு படத்தில் நடித்து வருகிறேன், ஆனால் அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் மட்டும்தான் சாப்பிடுவார். அந்த சாப்பாடும் ஹோட்டலிலிருந்து தான் வரும், மேலும் அவர் வீட்டுக்கு 4 மணி நேரம் மட்டுமே செல்வார். ஆகவே ஹோட்டல் சாப்பாடு எப்போதும் சாப்பிடக்கூடாது, உதாரணமாக பார்த்தால் நம்பியார், சிவாஜி கூட தங்களுடைய வீட்டில் இருந்து தான் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட்டிருக்காங்க, சாப்பாட்டு விஷயமும் அவர் இறப்பிற்கு ஒரு காரணம்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில் "மாரிமுத்துவுக்கு மாரடைப்பு 10வருடங்களுக்கு முன்பு ஏற்கெனவே வந்திருக்கின்றது, இதனால் அவர் கவனமாக இருந்திருக்க வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளார்.


அதுமட்டுமல்லாது "ஜோதிடர்களுக்கு எதிராக மாரிமுத்து விவாதிக்கும் போது கூட 10ஆவது படிக்கும்போதே தன்னுடைய ஜாதகத்தை கிழித்து எறிந்துவிட்டேன் எனக் கூறியிருக்கின்றார். இதனையடுத்து இவரின் பிறந்த தேதியைக் கேட்ட ஜோதிடர் மாரிமுத்துவின் உடல் நிலை குறித்துக் கூறினார்.

அதாவது மாரிமுத்துவிடம் இடுப்பிற்கு மேல் உங்களுக்கு பிரச்சினை இருக்கிறது என கூற பதிலுக்கு மாரிமுத்து, இடுப்பிற்கு மேல் இதயம் ஓடிக்கொண்டே துடிக்கிறது எனக் கிண்டலாக கூறி இருந்தார், ஆனால் இவ்வாறு கிண்டலாக கூறாமல் அவர் இல்லை என்று சொல்லிட்டு அதை முடித்திருக்கலாம்" எனவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement