• May 19 2024

அவர் என்னைக் கூப்பிடுற மாதிரியே இருக்கு... மாரிமுத்து இறந்த அதிர்ச்சியில் 'எதிர்நீச்சல்' சக்தி... என்ன சொல்லியிருக்கார் தெரியுமா..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த மாரிமுத்து அவர்கள் மாரடைப்பு காரணமாக இறந்த செய்தி கேட்டு ரசிகர்கள் முதல் திரையுலகப் பிரபலங்கள் வரை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். இந்நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகர் சக்தி மாரிமுத்துவுடன் தான்  இருந்த நாட்களில் அவரோடு இருந்த அனுபவங்களையும், நினைவுகளையும் பகிர்ந்துள்ளார்.


அந்தவகையில் நடிகர் மாரிமுத்து தொடர்பாக எதிர்நீச்சல் சீரியல் சக்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் சபரியிடம்  ஊடகவியலாளர்கள் கேட்டபோது அவர் இவ்வாறு பதிலளித்து உள்ளார் . '' நான் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.அதை ஏற்றுகொள்ளமுடியவில்லை, ஏன்னெனில் தினமும் ஒரே ரூம்ல எல்லாரும் ஒன்றாக இருப்போம், இன்னும் அவர் என்னை கூப்பிடுவது போல காதில் கேட்டுக்கொண்டே இருக்கு.


மேலும் மாரிமுத்துவின் கார் நிற்கும் இடத்தை காட்டி ' அங்கு தான் அவரின் கார் நிறுத்திவைப்பார், வேறு யாரும் அந்த இடத்தில் கார் நிறுத்தி வைத்தால் நான் தானே கார் வைக்க ரெடி பண்ணிவைத்து இருக்கேன் என்று சண்டை போடுவார். ஒவ்வொரு விசயத்திலும் நிறைந்து இருக்கிறார். அவர் விட்டு சென்ற பாடங்கள் அதிகம் இருக்கு.

நான் தனியாக இருக்கும் போதும் அவர் கூட இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டு தான் இருப்பார். இப்போது அவர் இல்லாதது ரொம்ப தனிமையாக இருப்பதாக தோணுது . அவர் இருக்கும் இடத்தில் அவர் குரல் தான் கேட்டு கொண்டு இருக்கும் இனி அவர் குரல் முழுதாக நின்று விட்டது என்பது கவலையாக இருக்கு என்று மன வருத்தத்துடன் தெரிவித்தார் .


மேலும் அவர் இல்லாத போது இனி ஷூட்டிங் ஷ்போட்டில் எப்படி இருக்க போகிறது என்று ஊடகவியலார் கேட்க, அதற்கு நான் குடும்பத்தாரோடு இருந்ததை விட அவரோடு இருந்தது அதிகம் . அவர் இல்லாத நிலையை எப்படி ஏற்றுகொள்வது என்று தெரியவில்லை. யாரென ஏற்றுக்கொண்டு போகத்தான்வேண்டும்.

எதுக்கும் பெருசா பயப்பட மாட்டாரு அதுதான் அவரை இந்த நிலைமைக்கு கொண்டு வந்து இருக்குபோல, எப்போவும் அவர் ரொம்ப ஜோலியா பேசுவாரு, அவர்கிட்ட எனக்கு புடிச்ச விஷயம் அவருடைய வேலையை சரியாய் செய்வாரு" என்று ரொம்ப கவலையாக எதிர்நீச்சல் சீரியல் சக்தி கருத்து தெரிவித்து இருக்கார்.


Advertisement

Advertisement